மேலும் அறிய

மூழ்கடிக்கும் மூடநம்பிக்கை.. செல்லப்பிராணியை பலி கொடுத்த பெண்.. பெங்களூருவில் பரபர

தனது செல்லப் பிராணியான லாப்ரடோர் நாயை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் இளம்பெண். பின்னர், அந்த நாயின் உடலை ஒரு துணியில் சுற்றி, ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடிவிட்டு, குடியிருப்பைப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பெங்களூருவில் பெண் ஒருவர், தனது செல்லப்பிராணி நாயை பலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாந்திரீக சடங்கின் ஒரு பகுதியாக நாயின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டினர் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூழ்கடிக்கும் மூடநம்பிக்கை!

மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் நடந்த நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.

மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை. அதன் தொடர்ச்சியாக நடந்துள்ள பெங்களூரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லப்பிராணியை பலி கொடுத்த பெண்:

திரிபர்ணா பயக் என்ற பெண், தனது செல்லப் பிராணியான லாப்ரடோர் நாயை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், அந்த நாயின் உடலை ஒரு துணியில் சுற்றி, அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடிவிட்டு, குடியிருப்பைப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்து அழுகிய வாசனை வருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தபோது, ​​அவர்கள் பெங்களூரு நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கதவைத் திறந்தபோது, ​​கழுத்தில் வெட்டுக்காயத்துடன் அழுகிய நாயின் உடலைக் கண்டனர்.

அந்த குடியிருப்பில் சில பொருட்களும் காணப்பட்டன. வீட்டைச் சுற்றி பல மதப் படங்கள் சிதறிக்கிடந்தன. தாந்திரீக சடங்கு, ஏதேனும் நடத்தப்பட்டதா என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். கூடுதலாக, வீட்டினுள் இரண்டு நாய்கள் (உயிருடன்) சுவருடன் கட்டி போடப்பட்டிருந்தன.

பெங்களூருவில் பரபர:

குறிப்பிட்ட வீட்டில் இருந்து அழுகிய வாசனை வருவதாக புகார் அளித்த மருத்துவர் ருத்ரேஷ் குமார், "பி.எம்.பி மருத்துவமனையில் நாய்கள் சிகிச்சை பெற்று வருகின்றன" என்றார்.  லாப்ரடோர் நாயின் பிரேத பரிசோதனையில் அது நான்கு நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது.

மகாதேவ்புரா காவல் நிலையத்தில் விலங்கு துன்புறுத்தல் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பில்லி சூனியம் வைப்பதற்காக இந்தக் கொடூரமான குற்றத்தை செய்தாரா அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலை இதற்குக் காரணமா என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பெண், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget