மேலும் அறிய

3 வருஷம் ஜெயில்தான்! தேசியக்கொடி ஏற்றும்முன் இதிலெல்லாம் கவனம் தேவை! முழு விவரம்!

இந்தியக் கொடி விதிகளின்படி, எந்தவொரு நபரும், அமைப்பும், தனியார் அல்லது பொது, அல்லது கல்வி நிறுவனமும் (சாரணர் முகாம்கள் உட்பட) மூவர்ணக் கொடியை எல்லா நாட்களிலும் அல்லது சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம்.

நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் இணையம் மூலம் ஒரு கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்ய 10 நாட்கள் மட்டுமே எடுத்து கொண்டதாக  தபால் துறை ஆகஸ்ட் 12 அன்று தெரிவித்தது.

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ் நடைபெறும் அரசின் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியின் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது.

தேசபற்றை பரப்புவதே இதன் நோக்கம் ஆகும். ஆனால் கொடியை ஏற்றுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பல விதிகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இந்த விதிகள், இந்திய கொடி விதிகள், 2002 மற்றும் தேசிய நினைவு சின்ன அவமதிப்பு தடுக்கும் சட்டம், 1971இல் இடம்பெற்றுள்ளன.

தேசிய கொடியை யார் எல்லாம் ஏற்றலாம்? எந்த நாள்களில் ஏற்றலாம்?

ஜனவரி 26, 2002 முதல் நடைமுறைக்கு வந்த இந்தியக் கொடி விதிகளின்படி, எந்தவொரு நபரும், அமைப்பும், தனியார் அல்லது பொது, அல்லது கல்வி நிறுவனமும் (சாரணர் முகாம்கள் உட்பட) மூவர்ணக் கொடியை எல்லா நாட்களிலும் அல்லது சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம். அல்லது காட்சிப்படுத்தலாம். தேசியக் கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதையை நிலைநாட்டும் வகையில் கொடி ஏற்றப்பட வேண்டும்.

தேசிய கொடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

கொடியானது ஒருவர் விரும்பும் அளவுக்கு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளத்திற்கும் (அகலத்திற்கும்) உயரத்திற்கும் இடையிலான விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.

எனவே, கொடியானது சதுரம் அல்லது வேறு எந்த வடிவத்திலும் இல்லாமல் செவ்வகமாக இருக்க வேண்டும். டிசம்பர் 30, 2021 அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, கொடியானது கையால் துருவிய மற்றும் கையால் நெய்த அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு அல்லது காதியால் செய்யலாம். கொடியை திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ வைத்தால் இரவும் பகலும் கூட பறக்க விடலாம்.

சேதமான கொடியை ஏற்றலாமா?

சேதமடைந்த அல்லது சிதைந்த தேசியக் கொடியை ஏற்றுவது விதிகளுக்கு எதிரானது. எப்பொழுதும், தேசியக் கொடியானது மரியாதைக்குரிய நிலையில் காட்சிபடுத்தப்பட வேண்டும்.

தேசியக் கொடியை விட உயரமாகவோ அல்லது அதற்கு பக்கவாட்டிலோ வேறு எந்தக் கொடியையும் ஏற்றுக் கூடாது. பறக்கவிடப்படும் கொடியின் மீது அல்லது அதற்கு மேலே பூக்கள், மாலைகள், சின்னம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது. மூவர்ணக் கொடியை அலங்கார நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக்கூடாது. அது பறக்கும் கம்பத்தில் எந்த விளம்பரமும் வைக்கக் கூடாது.

தேசத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியை அணிவது சரியா?

ஒரு நபர் தேசியக் கொடியை ஆடையாகவோ அல்லது சீருடையின் ஒரு பகுதியாகவோ பயன்படுத்துவதற்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரின் இடுப்பிற்கு கீழே அணியும் பொருளாக அதைப் பயன்படுத்த கூடாது. தேசிய கொடியானது மெத்தைகள், கைக்குட்டைகள், ஆகியவற்றில் வடிவமைக்கவோ அல்லது அச்சிடப்படவோ கூடாது. 

சுதந்திர தினத்திற்குப் பிறகு மூவர்ணக் கொடியை என்ன செய்ய வேண்டும்?

மூவர்ணக் கொடியில் அழுக்குபடவோ அல்லது சேதப்படும் வகையிலோ சேமித்து வைக்கக் கூடாது. உங்கள் கொடி சேதமடைந்தால், அதை ஒதுக்கிவிடவோ அல்லது மரியாதைக் குறைவாக நடத்தவோ கூடாது. காகிதத்தால் ஆன கொடிகளை வைத்திருப்பவர்கள், விழா முடிந்ததும் இவற்றை தரையில் வீசக்கூடாது. கொடி தரையிலோ அல்லது தண்ணீரில் தடம் புரளவோ அனுமதிக்கப்படாது.

கொடியை அவமதித்தால் என்ன தண்டனை?

தேசிய நினைவு சின்ன அவமதிப்பு தடுப்பு சட்டம் 2ஆவது பிரிவின்படி, “எந்தவொரு பொது இடத்திலோ அல்லது பொது மக்கள் பார்வையிலோ வேறு எந்த இடத்திலோ தேசிய கொடியை எரிக்கவோ, சிதைக்கவோ, அசுத்தம் செய்யவோ, அழிக்கவோ, மிதிக்கவோ அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கவோ ( வார்த்தைகளால், பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும், அல்லது செயல்களாலும்) கூடாது. அப்படி மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பின்வாங்கும் அண்ணாமலை.. சபரிமலையில் அடுத்த ஊழல்.. 11 மணி செய்திகள் இதோ!
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: டெலிகிராம் செயலிக்கு தடை.. தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி.. 11 மணி வரை நடந்தது என்ன?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget