மேலும் அறிய

காசியை போலவே தேசத்தின் கலாச்சார மையமாக திகழும் தமிழ்நாடு: உ.பி. முதலமைச்சர் யோகி புகழாரம்

தமிழ்நாடு மற்றும் காசியில் இந்திய கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன என உத்தர பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் பதிப்பு கடந்தாண்டு நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை நடத்தப்பட்டது. 

காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:

இந்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பு இன்று தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சங்கமத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கடந்த ஓராண்டில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் தமிழ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் காசியில், இந்திய கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. 

ஆன்மீக ரீதியாக காசி முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இருப்பதால் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இது இந்தியாவின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வின் மையமாக உள்ளது. காசியைப் போலவே, தமிழகமும் கலாச்சார மையமாக இருந்து வருகிறது. 

"கலாச்சார தேசியத்தை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்"

பண்டைய காலங்களிலிருந்து அறிவு, கலை, கட்டிடக்கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மையமாக இருந்து வருகிறது.
தமிழ் இலக்கியம் செழுமையும் தொன்மையும் கொண்டது. இந்தியாவில் சமஸ்கிருதமும் தமிழ் இலக்கியமும் மிகவும் தொன்மையானவை. அனைவரையும் உள்ளடக்கிய இலக்கியம் சமூகத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உருவாக்குகிறது. காசி தமிழ் சங்கமம் நம் நாட்டின் கலாச்சார தேசியத்தை வலுப்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவதென்றால் மகாதேவனின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதை போன்றது. அதனால்தான் தமிழ்நாடு மக்களுக்கும் காசிக்கும் ஒரு சிறந்த பந்தம் உள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்குள் நுழைந்ததும் 'ஒரே பாரதம் வளமான பாரதம்' என்ற உணர்வு தெரிந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஆதீன துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ், இதே செங்கோல் 1947 இல் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக மாறியது.

உலகின் பிற நாடுகளில், தேசம் என்பது ஒரு அரசியல் வரையறையாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு தேசமாக இந்தியா ஆன்மீக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் போன்ற மகான்களால் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் இந்தியாவின் தேசிய உணர்வை எழுப்பினர்.

ஒரு வகையில், விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. நான் சொன்னது, செய்தது எல்லாம் நான் நினைத்தபடி நடந்ததா என்று அளவிட வேண்டும்? அது நினைத்தவர்களுக்கு நடந்ததா? விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா ஒரு பெரிய கனவு. ஒரு பெரிய தீர்மானம். இந்த தீர்மானத்தை நம் சொந்த முயற்சியால் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget