மேலும் அறிய

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?

”இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பிலேயே வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது”

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த முறை இடைத் தேர்தலில் நேரடியாக ஆளுங்கட்சியான திமுகவே களம் காண முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

காங்கிரஸ்க்கு பதில் திமுக – நிர்வாகிகள் வலியுறுத்தல்

நேற்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் ஈரோடு நிர்வாகிகள் திமுக போட்டியிட வேண்டும் என்பதைதான் வலியுறுத்தியுள்ளனர். 2021 தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி காலமானார். அதன்பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .ஆனால், அவரும் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் காலமானார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்து இடைத் தேர்தலை நடத்தும்படி தமிழக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், விரைவில் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ராகுல்காந்தியிடம் திமுக தலைமை சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுக போட்டியிட விரும்புவது ஏன் ?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் நிலையில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்தி மீண்டும் வெற்றி பெற்று காட்டினால், அது வரவிருக்கும் 2026 தேர்தலுக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் 5 வருடத்திற்குள் ஒரே தொகுதியில் நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற்று காட்டினால், திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரியவரும் என்பதாலும் இந்த ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்த முறை திமுகவே போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.

ராகுலிடம் பேசும் டி.ஆர்.பாலு

திமுக இந்த முடிவு குறித்து விரைவில் திமுக மக்களவை குழுத் தலைவரும் திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிடம் பேசவிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுகவில் தொடங்கியது போட்டா போட்டி

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கிப் போட்டிப்போட இப்போதே அந்த மாவட்டத்தில் போட்டா போட்டி தொடங்கியுள்ளது. மாவட்ட அமைச்சர் முத்துச்சாமியிடமும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடமும் பலர் தங்களுக்கு சீட் பெற்றுத் தருமாறு வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை இந்த முறை ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட்டால், அமைச்சர் முத்துசாமி கைக்காட்டும் வேட்பாளரை திமுக அறிவிக்கப்போகிறதா அல்லது கொங்கு மண்டலத்தை தனது கட்டுக்குள் வைக்க பணியாற்றி வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லும் வேட்பாளரை முதல்வர் அறிவிக்கப்போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.

காங்கிரசே போட்டியிடவேண்டும்

ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுக போட்டியிட விட்டுக்கொடுத்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக போய்விடும் என்றும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு வாங்கி போட்டியிடுவதில் சிரமங்கள் இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றன. எனவே, இந்த முறையும் காங்கிரஸ் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Embed widget