மேலும் அறிய

பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும்: போட்டுத்தாக்கிய கெஜ்ரிவால்

இந்தியாவின் பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமலாக்கத் துறையும், சிபிஐயும் எல்லா கட்சிகளிலும் இருக்கும் ஊழல்வாதிகளை ஒரே கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது. அவர்கள் ரெய்டு செல்வார்கள். அங்கே இருப்பர்கள் நெற்றியில் துப்பாக்கி வைப்பார்கள். பின்னர் பாஜகவுக்கு ஆதரவா இல்லை ஜெயிலா எனக் கேட்பார்கள். ஆம் என்றால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் ஜெயில் தான். அதனால் மோடி என்று இந்த தேசத்தின் பிரதமராக இல்லாமல் போகிறாரோ அன்றுதான் இந்த தேசம் ஊழலற்ற தேசமாக மாறும். பாஜக அரசு ஆட்சியிழந்து, பாஜகவினர் சிறைக்குப் பின்னால் போக வேண்டும். அன்றே இத்தேசத்திற்கு விடுதலை" என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி பேசுகையில், மத்திய புலனாய்வு அமைப்புகளை குற்றஞ்சாட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது என்பது ஊழல்வாதிகள் ஒரே மேடையில் திரள்வதற்கு சமம் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே கெஜ்ரிவால் இன்று பேசியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர். பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்நிலையில் தான் மத்திய புலனாய்வு அமைப்புகளை குற்றஞ்சாட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது என்பது ஊழல்வாதிகள் ஒரே மேடையில் திரள்வதற்கு சமம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் இந்தியாவின் பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Embed widget