மேலும் அறிய

பார்ட்டியில் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் செய்த செயலால் அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ட்டியில் நண்பர்கள் இணைந்து சாப்ட்வேர் இன்ஜினியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு சம்பவங்களில் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் திருமணமான பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி:

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் வைத்து மென்பொருள் பொறியாளரை அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளனர். மற்றொரு பெண்ணை அவர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

தனக்கு புதிய வேலை கிடைத்ததாகவும் அதை கொண்டாடுவதற்காக தனது சிறு வயது நண்பரான கௌதம் ரெட்டி மற்றும் இருவருக்கும் பொதுவான மற்றொரு நண்பரையும் பாருக்கு அழைத்ததாகவும் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வனஸ்தலிபுரம் காவல் ஆய்வாளர் டி. ஜலேந்தர் ரெட்டி கூறுகையில், "அவர்கள் பாருக்கு சென்றனர். ரெட்டியும் அவருடைய நண்பரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இருவரும் அவரை ஹோட்டலில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணும் ரெட்டியும் 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர்" என்றார்.

பேருந்து ஓட்டுநர் வெறிச்செயல்: மற்றொரு சம்பவத்தில், நிர்மலில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு திருமணமான பெண் தனியார் பேருந்தில் சென்றுள்ளார். இன்று அதிகாலை, வாயில் துணியை வைத்து அடைத்து ஓட்டுநர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உஸ்மானியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர், "பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த டிரைவர் கிருஷ்ணா அங்கிருந்து ஓடிவிட்டார். ஹைதராபாத் நகருக்குள் நுழையும் போது தர்னாகா அருகே குறிப்பிட்டை பேருந்தை மறித்து, பேருந்தின் மற்ற ஓட்டுநரான சேஷய்யாவை கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.

அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
Embed widget