மேலும் அறிய

Freedom Of Speech: எம்பி., எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுரிமைக்கு கட்டுப்பாடா? - பரபரப்பான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. 

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. 

நடந்தது என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் காரை வழிமறித்த கொள்ளை கும்பல், அதிலிருந்த இருபெண்களை  வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது அம்மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த கட்சியின் மூத்த தலைவரும், கேபினட் அமைச்சருமான அசம் கான், இது உத்தரபிரதேச அரசுக்கு எதிரான அரசியல் சதி என குறிப்பிட்டார்.

இதனை எதிர்த்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அசம் கான் உச்சநீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அதேசமயம் இந்த வழக்கு அரசின் கடமை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 

இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம், அமைச்சர் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவர்கள், ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் விசாரணையின் நேர்மை குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிடலாமா என்று கேள்வியை எழுப்பியது. அதேபோல் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இதற்கிடையில் இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது பொதுப் பதவியில் இருப்பவர்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இழிவான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எழுதப்படாத விதி இருப்பதாகக் தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேச்சுரிமைக்கு எதிராக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 4 பேர் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget