மேலும் அறிய

தூக்கு தண்டனைக்கு முற்றுப்புள்ளி..மாற்றாக வேறு வழியில் மரண தண்டனை...உச்ச நீதிமன்றம் பரபர கருத்து..!

மரண தண்டனையை நிறைவேற்றப்படும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், மரண தண்டனை, நாகரீக சமூகத்திற்கு உகந்தது அல்ல என்றும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

இந்த சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றப்படும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

அதாவது, தூக்கின் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக இன்னும் கண்ணியமான, வலி குறைவாக இருக்கும் வகையிலான, சமூக ரீதியாக ஏற்று கொள்ளும்படியான வழியில் சிறைவாசிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்கும்படி மத்திய அரசை  உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. 

தூக்கு தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, இந்தியைாவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து மறுபரிசீலனை செய்ய நிபுணர் குழு அமைக்கவும் ஆலோசனை வழங்கியது. 

தூக்கு தண்டனைக்கு முற்றுப்புள்ளியா?

இதுகுறித்து டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், "அத்தகைய குழுவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வல்லுநர்கள், சட்டப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் இடம்பெறுவார்கள். இதற்காக, சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதன் அடிப்படையில் மிகவும் மனிதாபிமான மரணதண்டனை முறை உள்ளதா என்பதை ஆராய முடியும். எனவே, தூக்கு தண்டனையை அரசியலமைப்புக்கு எதிரானதாக அறிவித்துவிடலாம்.

தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால், எங்களுக்கு சிறந்த தரவுகள் தேவை. தூக்கு தண்டனையின் தாக்கம், அதனால் ஏற்படும் வலி, எப்போது மரணம் நிகழ்கிறது, நபரை தூக்கிலிடுவதற்கு தேவைப்படும் வளம் போன்ற தரவுகள் தேவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மனித மாண்புக்கு இணங்க வேறு விதமான மரணதண்டனையை பரிந்துரைப்பதில் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதை அறிய வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய நீதிபதி நரசிம்மா, "தூக்கிலிடுவது வலியற்றதுக்கு மிக நெருக்கமானது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது எப்பொழுதும் வெற்றி பெறவில்லை. இங்கே கேள்வி என்னவென்றால், விஞ்ஞானம் என்ன வழங்குகிறது என்பதுதான். அறிவியலின் படி சிறந்த முறை எது என்பதுதான் கேள்வி" என்றார்.

ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவில், "மனிதாபிமான, விரைவான மற்றும் கண்ணியமான மாற்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரண ஊசியுடன் ஒப்பிடும்போது தூக்கில் தொங்குவது கொடூரமானது. மற்றும் காட்டுமிராண்டித்தனமானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசின் வாதம்:

கடந்த 2018ஆம் ஆண்டு, தூக்கு தண்டனைக்கு ஆதரவாக மத்திய அரசு பிரமாண பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதில், தூக்கில் போடுவது காட்டுமிராண்டித்தனமானது இருப்பதாக தாங்கள் கருதவில்லை என மத்திய அரசு வாதிட்டம் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget