மேலும் அறிய

சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட்டுக்கு பிணை கிடைக்குமா? கிடைக்காதா ? நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பால் சர்ச்சை

குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆவணங்களை தயாரித்த வழக்கில் பிணை கேட்டு டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி, குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படுபவர் டீஸ்டா செடல்வாட்.

குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதா?

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். 1993 மும்பை மதக் கலவரத்திற்கு பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார் டீஸ்டா செடல்வாட். 

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி, முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

வழக்கில் சிக்கிய டீஸ்டா செடல்வாட்:

அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார், கடந்தாண்டு ஜூன் 25ஆம் தேதி கைது செய்தனர். இதனிடையே, டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்தா செடல்வாட் ஆகியோர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. குஜராத் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. 

நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பால் பிணை கிடைப்பதில் சிக்கல்:

இந்த நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆவணங்களை தயாரித்த வழக்கில் பிணை கேட்டு டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்து, அவரை உடனடியாக சரண் அடைய நேற்று உத்தரவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

உடனடி வழக்காக விசாரிக்க வேண்டி அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டது. பின்னர், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓகா, பி.கே. மிஸ்ரா இருவேறு தீர்ப்பை வழங்கினர். எனவே, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான பெரிய அமர்வுக்கு, வழக்கு விசாரணையை மாற்ற பரிந்துரை செய்துள்ளது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.