மேலும் அறிய

தொடர்ந்து அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்...சிறார் நீதிச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்..!

"பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறார்கள் ஈடுபடும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்துள்ளது. இதில், உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருணையுள்ள சிறார் நீதிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் எட்டு வயது பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கி இருந்தது. 

அந்த வழக்கில், முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக ஷுபம் சங்கரா என்பவர் கருதப்படுகிறார். குற்றம் நிகழ்ந்தபோது, அவர் சிறார் அல்ல என்பதால் அவரை வயது வந்தவராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் ஜே பி பார்திவாலா அடங்கிய அமர்வு, அமெரிக்க இசையமைப்பாளர் கர்ட் கோபேன்வின் வாசகத்தை மேற்கோள்காட்டியது. அதில், "பாலியல் வன்கொடுமை என்பது பூமியின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். இது, ஒவ்வொரு நிமிடமும் அரங்கேறி வருகிறது.

 

பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்.

உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு கற்பிப்பதுதான். பிரச்னையின் மூலத்திற்குச் சென்று அங்கு தொடங்கவும்.

இந்த விஷயத்தை முடிப்பதற்கு முன், இந்தியாவில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்களின் விகிதத்தை கவலைக்குரியதாக கருதிகிறோம். உடனடி கவனம் தேவை என்பதை நாங்கள் கவனிக்க விரும்புகிறோம். 

பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் அல்லது கொலை எதுவாக இருந்தாலும், குற்றம் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் இளம் வயதினராக இருந்தால், அவரை மனதில் வைத்து மட்டுமே கையாள வேண்டும் என்று உறுதியாக நம்பும் ஒரு சிந்தனைப் பள்ளி நம் நாட்டில் உள்ளது. அவரை சீர்திருத்துவதே நமது குறிக்கோள்.

சீர்திருத்துவதை குறிக்கோளாக வைப்பது நன்று. ஆனால், சிறார் நீதிச் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றி உள்ளதா? சிறார்களால் நடத்தப்படும் கொடூரமான குற்றங்கள் தொடர்ந்து வருவது. சிறார் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN weather Reoprt: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 21.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம் இதோ
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
Tata Best Car: அவ்ளோ பெரிய டாடா பிராண்ட், ஒத்தை ஆளாய் தாங்கி பிடிக்கும் கார் மாடல் - இல்லாததே இல்லை..!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
EPFO : டிஜிலாக்கரில் EPFO சேவை: இனி UMANG தேவையில்லை! PF இருப்பு, பாஸ்புக் & UAN-ஐ எளிதாகப் பெறுங்கள்!
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
Embed widget