மேலும் அறிய

MP Church: சர்ச்சில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் காவிக்கொடி? எவ்வளவு சொல்லியும் கேட்கல: பாதிரியார் வேதனை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தேவாலயம் ஒன்றில் காவிக்கொடி ஏற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 

ரூ.1800 கோடி செலவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று அங்கு நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் காவிக்கொடியுடன் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடும் சிலர் தேவாலயம் ஒன்றின் மீது காவிக்கொடி ஏற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. சம்பந்தப்பட்ட அந்த வீடியோ, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் ராணாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தப்தலை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் காவிக் கொடியுடன் வந்த சிலர், தேவாலயம் மீது ஏறியுள்ளனர். அங்கு நிறுவப்பட்டுள்ள சிலுவை மீது காவிக்கொடியை கட்டி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். அந்த சம்பவம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. 

இதுகுறித்து அந்த தேவாலயத்தின் போதகராக உள்ள நர்பு அமலியார் என்பவர் தெரிவிக்கையில், ‘வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்தபோது சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்த கூட்டத்தில் குறைந்தது 25 பேர் வரை இருந்தனர். அவர்களில் சிலர் தான் ஆலயம் மீது ஏறி காவிக்கொடியை கட்டினர். அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நன்றாகவே அந்த நபர்களை தெரியும். இப்படி செய்வது நல்லதல்ல என எவ்வளவோ சொன்னேன். மேலும் தேவாலயத்துக்கு வரும் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள் என சொன்னேன். ஆனால் அந்த நபர்கள் எதுவும் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

ஆனால் இதுதொடர்பான ஜாபுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின், ‘இந்த சம்பவத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அது உண்மையில் தேவாலயம் கிடையாது. ஒரு தனிநபரின் வீடு என்பதால் வழக்கு எதுவும் பதியவில்லை’ என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
India Vs Pakistan :
India Vs Pakistan : "இந்தியா எல்லைக்குள்ளா வர்றீங்க?” பாக். லாகூரில் தாக்குதலை தொடங்கியது இந்திய படை..!
ஜம்முவை நோக்கி வரும் பாகிஸ்தான் ட்ரோன்கள்.. தாக்கி அழித்த இந்தியா.. மிரட்டலா இருக்கே! 
மிரட்டலா இருக்கே! ஜம்முவுக்கு குறி.. வானில் பறக்கும் ட்ரோன்கள்.. அசால்ட் காட்டும் இந்தியா
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhitaபதிலடியா? பீகார் தேர்தல் உத்தியா?”தீவிரவாதத்துக்கு பொறுப்பு மோடி?”நெருக்கும் எதிர்க்கட்சிகள் | india attack pakistanPAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
JF-17 Aircraft : ”பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா” ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்..!
India Vs Pakistan :
India Vs Pakistan : "இந்தியா எல்லைக்குள்ளா வர்றீங்க?” பாக். லாகூரில் தாக்குதலை தொடங்கியது இந்திய படை..!
ஜம்முவை நோக்கி வரும் பாகிஸ்தான் ட்ரோன்கள்.. தாக்கி அழித்த இந்தியா.. மிரட்டலா இருக்கே! 
மிரட்டலா இருக்கே! ஜம்முவுக்கு குறி.. வானில் பறக்கும் ட்ரோன்கள்.. அசால்ட் காட்டும் இந்தியா
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
IPL 2025 PBKS vs DC: பிரித்தெடுத்த பஞ்சாப்.. ஆட்டத்தை முடித்த மழை! சிக்கலில் டெல்லி
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா.. பாகிஸ்தான் செயலால் ஷாக்
பயங்கரவாதிகளுக்கு அரசு இறுதிச் சடங்கு செய்வதா? கண் சிவந்த இந்தியா
Duraimurugan : ”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..? முழு பின்னணி..!
”துரைமுருகனிடமிருந்த கனிம வளத்துறை பறிப்பு” முதல்வரின் கோபம் காரணமா..?
Defence Ministry Explanation: இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
இரக்கமில்லாமல் குழந்தைகள், பெண்கள் உயிரை பறித்த பாகிஸ்தான்.. கட்டாயத்தால் பதிலடி - இந்திய ராணுவம்
"போர் வேணாம்" இந்திய, பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கி தவிக்கும் கிராமங்கள்
Embed widget