மேலும் அறிய

இது தேவைதானா? வெளிநாட்டில் திருமணம் செய்யாதீங்க... பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்

அமெரிக்க, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று, இந்திய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது ட்ரெண்டாக மாறியள்ளது. 

சமீப காலமாக, வெளிநாட்டில் திருமணம் செய்யும் போக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இந்திய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது ட்ரெண்டாக மாறியள்ளது. 

வெளிநாட்டில் திருமணம் செய்யும் போக்கு அதிகரிப்பு:

இந்த நிலையில், இந்தியர்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ளது. இந்த திருமண சீசனில் சுமார் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக அமைப்புகள் கணித்துள்ளன.

திருமணங்களுக்கு ஷாப்பிங் செய்யும் போது, ​​நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆம், திருமணம் என்ற தலைப்பில் பேச தொடங்கியதால், இந்த விஷயத்தை சொல்கிறேன். எனக்கு நீண்ட காலமாக ஒரு விஷயம் வருத்தத்தை தருகிறது.

என் மனதில் இருக்கும்  வலியை என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் வெளிப்படுத்தவில்லை என்றால், நான் அதை வேறு யாரிடம் போய் சொல்வேன்? சற்று யோசித்துப் பாருங்கள். சமீப காலமாக, சில குடும்பங்கள் வெளியூர் சென்று திருமணங்களை நடத்தும் புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. இது தேவையா?

பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்:

இந்திய மண்ணில் நாட்டு மக்கள் மத்தியில் திருமண விழாக்களை மக்கள் நடத்தினால், நாட்டின் பணம் நாட்டிலேயே தங்கும். வெளியே செல்லாது. இந்தியாவில் திருமணத்தை நடத்துவதால் நம் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்கள் திருமணத்தைப் பற்றி ஏழைகள் கூட தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். உள்ளூர் பொருள்களுக்கு ஆதரவு தருவதை உங்களால் இன்னும் விரிவுபடுத்த முடியும் அல்லவா? நம் நாட்டில் ஏன் இதுபோன்ற திருமண விழாக்களை நடத்தக்கூடாது?

நீங்கள் விரும்பும் அமைப்பு இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் அமைப்புகள் வளரும். பெரிய பணக்கார குடும்பங்களை பற்றி பேசுகிறேன். என்னுடைய இந்த வலி நிச்சயம் அந்த பெரிய குடும்பங்களை சென்றடையும் என்று நம்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரிய அளவில் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். நம் நாடு முன்னேறுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இன்று இந்தியாவில் 140 கோடி மக்களால் பல மாற்றங்கள் நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான நேரடி உதாரணத்தை இந்த பண்டிகைக் காலத்தில் பார்த்தோம். 

கடந்த மாதம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினேன். நான் சொல்லி ஒரு சில நாட்களில், தீபாவளி, சாத் ஆகிய பண்டிகைகளில் நாட்டில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது" என்றார்.

இதையும் படிக்க: Constitution Day: காலம் கடந்து நிற்கும் இந்திய அரசியலமைப்பு: மக்களின் மனசாட்சியாக மாறியது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget