![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PM Modi: மாஸ்க் போடுங்க.. இதை உறுதிப்படுத்துங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள்
கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
![PM Modi: மாஸ்க் போடுங்க.. இதை உறுதிப்படுத்துங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள் PM Modi COVID-19 infrastructure at all levels is maintained at a high level of preparedness in terms of equipment PM Modi: மாஸ்க் போடுங்க.. இதை உறுதிப்படுத்துங்க.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/d5b183c34dc720f246cd8e46b1f7cd6b1671717724480571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதிய BF.7 வகை கொரோனா பரவல் தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆக்ஸிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார்.
புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில், எந்தவொரு புதிய கொரோனா வகைகளையும் உற்று கவனிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டு கொண்டு வருகிறது. மேலும் சீனாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதை காரணம் காட்டி மக்கள் நெரிசலான பகுதிகளில் முககவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்ட 6 குறிப்புகள்:
- விழிப்புடன் இருக்குமாறும், முககவசங்கள், சானிடைசர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு கொரோனா பரிசோதனையை நடத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இது புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்க உதவும்.
- கொரோனா பரவல் காரணமாக விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு ரேண்டம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- கொரோனா வைரஸின் எப்போதும் மாறிவரும் தன்மை உலக ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது.
- கடந்த சில நாட்களாக, உலகில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில், வழக்குகள் குறைந்து வருகின்றன. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை நாங்கள் கண்காணித்து வருகின்றனர்.
- கொரோனா எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், கொரோனாவுக்கு ஏற்ற நடைமுறையை பின்பற்றவும் மக்களை வலியுறுத்தனர்.
கண்காணிப்பு தீவிரம்:
கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)