மேலும் அறிய

Thamizhachi Thangapandian MP : மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் - மக்களவையில் குரல் கொடுத்த திமுக எம்பி 

மக்களவையில் பேசிய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது நின்றபாடில்லை.

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 14ஆம் தேதி, பாக் ஜலசந்தி அருகே நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், 14 பேர், மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, எல்லைப்பகுதியை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர். சிறையில் அடைத்தனர். மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தனர்.

இதற்கு மத்தியில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனை தொடர்ந்து, மீனவர்கள் 14 பேரையும், இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது.

இவர்கள், ஏர் இந்தியா விமானம் வாயிலாக, நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாஸ்போர்ட் இல்லாததால், அவசர சான்றிதழ் வாயிலாக, அனைவரும் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்ட தொடரின் முதல் நாளிலேயே தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியுள்ளார்.

மக்களவையில் பேசிய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "குஜராத் மீனவர்கள் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படும்போது, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது அவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என்று அழைக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என அழைக்கிறீர்கள். தமிழ்நாட்டு மீனவர்களை ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.

மேலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகளை அமைக்க மத்திய அரசிடம் திமுக எம்பி  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர், மொத்தம் 17 வேலை நாட்கள் நடைபெறகிறது. அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிய மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றுள்ள குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
"நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத்தில் ‘ Azadi Ka Amrit Mahotsav ’ நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது சிறப்பானது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரெளபது முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் பிரதமர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget