மேலும் அறிய

Pahalgam Attack Sketched: அடப்பாவிங்களா.. பக்கா ஸ்கெட்ச் போட்டு சுட்ட தீவிரவாதிகள்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்...

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பக்காவாக பிளான் போட்டு தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்ஐஏ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த தாக்குதல் குறித்த தீவிர விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. என்ஐஏ விசாரித்து வரும் இந்த வழக்கில், தீவிரவாதிகளின் திட்டமிடல் பற்றிய பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்)  அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

இதனிடையே, பாகிஸ்தான் அரசு வேறு வழியின்றி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரே பேசியதைத் தொடர்ந்து, இந்தியா அவர்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தாக்குதல் தொடர்பான விசாரணயை என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் அப்பகுதியின் தரைத்தளத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது தகவலின்படி, தாக்குதல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் பல்வேறு பகுதிகளை உளவு பார்த்துவந்ததாக தெரிகிறது. ஏப்ரல் 15-ம் தேதியே பஹல்காம் பகுதிக்கு வந்த தீவிரவாதிகள், பைசரன் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு, உள்ளூரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, பேதாப் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களை உளவு பார்த்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பைசரன் பள்ளத்தாக்கு தவிர, மற்ற மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பலமாக இருந்ததால், அப்பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் என்ஐஏ, பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் வேலை செய்துவந்த, தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 20 தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.

அதில், 4 பேர், உளவு பார்ப்பதற்கு தீவிரவாதிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, 3 சேட்டிலைட் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஃபோன்களின் சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதில், அப்பகுதி தொழிலாளர்கள் சிலர் அவர்களுடன் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் என்ஐஏ கூறியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக, என்ஐஏ இதுவரை 2,500 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதில், 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Udhayanidhi:
Udhayanidhi: "அடிமைகள், சங்கிகள், பாசிசம்.." எதிர்க்கட்சிகளை விளாசிய உதயநிதியின் அனல்பறந்த பேச்சு
Embed widget