மேலும் அறிய

தேர்தலை புறக்கணிக்குமாறு போஸ்டர்... போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளருக்கு காத்திருந்த கண்ணிவெடி! மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒடிசாவில் உள்ள பல பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதேபோல, மதன்பூர் ராம்பூர்பகுதியில் உள்ள மோகனகிரி என்ற கிராமத்தில் உள்ள கர்லகுந்தா பாலத்தின் அருகிலும் மாவோயிஸ்ட்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

மாவோயிஸ்டுகள் ஒட்டியிருந்த சுவரொட்டியை அந்த மாநிலத்தின் மொழியான ஒடியாவில் வெளியாகும் தினசரி நாளிதழில் பணியாற்றும் ரோகித் பிஸ்வால் ( வயது 43) என்பவர் நேற்று புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த சுவரொட்டியை மிகவும் நெருக்கத்தில் சென்று அவர் எடுக்க முயன்றுள்ளார். சுவரொட்டியை சுற்றி புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் அவர் சிக்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் செல்வதற்குள் வெடிகுண்டு வெடித்து ரோகித்பிஸ்வால் பரிதாபமாக உயிரிழந்தார்.


தேர்தலை புறக்கணிக்குமாறு போஸ்டர்... போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளருக்கு காத்திருந்த கண்ணிவெடி! மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

உயிரிழந்த ரோகித் பிஸ்வால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த கிராமம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரண்டு கம்பெனிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பத்திரிகையாளர் ரோகித் பிஸ்வால் குடும்பத்திற்கு அந்த மாநில முதல்வர் நவீன்பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூபாய் 13 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் அதிகளவில் உள்ள மாவோயிஸ்ட்கள் தாங்கள் ஒட்டிய சுவரொட்டிகளை பாதுகாப்பு படையினர் அகற்றக்கூடாது என்பதற்காக பல சுவரொட்டிகளை சுற்றிலும் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பார்கள். இந்த வெடிகுண்டுகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டவைகளாக இருக்கும், இதனால், பாதுகாப்பு படையினரே இவ்வாறான சுவரொட்டிகளை அகற்றுவது என்றால் அதற்கு முன்பு அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை செய்த பின்னரே அகற்றுவார்கள்.  


தேர்தலை புறக்கணிக்குமாறு போஸ்டர்... போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளருக்கு காத்திருந்த கண்ணிவெடி! மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் நவீன்பட்நாயக், தனது அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசா மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வடகிழக்கு இந்தியாவிலும் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக, அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget