மேலும் அறிய

Parliament: “பாஜகவினர் பயப்படாதீங்க; நான் பேசப்போவது இதைப்பற்றிதான்” - பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக பேசிய ராகுல்காந்தி!

மணிப்பூர் பற்றியே பேசுவேன், அதானி பற்றி பேசப்போவதில்லை. பாஜகவினர் அச்சப்பட தேவையில்லை என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெறுகிறது. இதில் பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசினார். 

அப்போது பேசிய ராகுல்காந்தி “அதானி பற்றி பேசமாட்டேன். பாஜகவினர் அச்சப்பட வேண்டாம்” என்றார். 

மேலும், “மணிப்பூர் பற்றியே பேசுவேன். நான் இன்று யாரையும் அதிகமாக தாக்கி பேசப்போவதில்லை. நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா யாத்திரையை மேற்கொண்டேன். யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள். குமரியில் யாத்திரியை தொடங்கியபோது நாட்டை புரிந்து கொள்வதற்காகவே தொடங்கினேன். இதற்கு முன் நான் பேசிய பேச்சு பாஜகவினருக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி” என்றார். 

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “இந்த பயணத்தில் மக்களை பற்றி தெரிந்து கொள்ள பயணித்தேன். இதில் மக்களின் அன்பு வெளிப்பட்டது. இதற்காக நான் இறக்கவும் தயாராக உள்ளேன். இதற்காக பிரதமர் மோடி விரும்பினால் சிறை செல்ல கூட தயாராக உள்ளேன். 

இந்த பயணத்தில் 8 வயது சிறுமி எழுதிய கடிதத்தில், ‘ராகுல் நான்  உங்களுடன் பயணிக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம், இந்த பயணத்தை மேற்கொள்ள போதிய சக்தியை எனக்கு கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். லட்சக்கணக்கான மக்கள் இந்த பயணத்தில் எண்ணுடன் இருந்தனர். தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் உடன் இருந்தனர். விவசாயிகளிடையே பேசும் போது அவர்களின் பயம், பசி எனக்குள் வந்தது.

 நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்.  இந்தியா அனைவருக்குமான வீடு, இந்தியா மக்கள் குரலை பிரதிபளிக்கும் நாடாக உள்ளது, ஆனால் அது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது” என பேசினார். 

என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறாள். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் இழந்து இருக்கிறீர்கள். இந்தியா என்ற சித்தாந்தத்தை அரசு கொண்டு இருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. அரசின் அகங்காரத்தால் ஹரியானா மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் அரசு கேட்கவில்லை” என்று ஆவேசமாக பேசினார் ராகுல்காந்தி. 

தலைப்பு செய்திகள்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Embed widget