மேலும் அறிய

Parliament: “பாஜகவினர் பயப்படாதீங்க; நான் பேசப்போவது இதைப்பற்றிதான்” - பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக பேசிய ராகுல்காந்தி!

மணிப்பூர் பற்றியே பேசுவேன், அதானி பற்றி பேசப்போவதில்லை. பாஜகவினர் அச்சப்பட தேவையில்லை என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெறுகிறது. இதில் பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசினார். 

அப்போது பேசிய ராகுல்காந்தி “அதானி பற்றி பேசமாட்டேன். பாஜகவினர் அச்சப்பட வேண்டாம்” என்றார். 

மேலும், “மணிப்பூர் பற்றியே பேசுவேன். நான் இன்று யாரையும் அதிகமாக தாக்கி பேசப்போவதில்லை. நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா யாத்திரையை மேற்கொண்டேன். யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள். குமரியில் யாத்திரியை தொடங்கியபோது நாட்டை புரிந்து கொள்வதற்காகவே தொடங்கினேன். இதற்கு முன் நான் பேசிய பேச்சு பாஜகவினருக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி” என்றார். 

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “இந்த பயணத்தில் மக்களை பற்றி தெரிந்து கொள்ள பயணித்தேன். இதில் மக்களின் அன்பு வெளிப்பட்டது. இதற்காக நான் இறக்கவும் தயாராக உள்ளேன். இதற்காக பிரதமர் மோடி விரும்பினால் சிறை செல்ல கூட தயாராக உள்ளேன். 

இந்த பயணத்தில் 8 வயது சிறுமி எழுதிய கடிதத்தில், ‘ராகுல் நான்  உங்களுடன் பயணிக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம், இந்த பயணத்தை மேற்கொள்ள போதிய சக்தியை எனக்கு கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். லட்சக்கணக்கான மக்கள் இந்த பயணத்தில் எண்ணுடன் இருந்தனர். தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் உடன் இருந்தனர். விவசாயிகளிடையே பேசும் போது அவர்களின் பயம், பசி எனக்குள் வந்தது.

 நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்.  இந்தியா அனைவருக்குமான வீடு, இந்தியா மக்கள் குரலை பிரதிபளிக்கும் நாடாக உள்ளது, ஆனால் அது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது” என பேசினார். 

என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறாள். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் இழந்து இருக்கிறீர்கள். இந்தியா என்ற சித்தாந்தத்தை அரசு கொண்டு இருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. அரசின் அகங்காரத்தால் ஹரியானா மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் அரசு கேட்கவில்லை” என்று ஆவேசமாக பேசினார் ராகுல்காந்தி. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
Embed widget