Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Tamil Nadu New DGP Mahesh Kumar IPS: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் அந்தந்த அரசுகள், தங்களுக்கு ஏற்ற வகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநர் பதவியான இதுதான், காவல்துறையில் உயரிய பதவி ஆகும்.
யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
முன்னதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் எனப்படும் ஆயுதப் படை கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றி உள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னையில் இவரின் சிறப்பான நிர்வாகம், பலரின் பாராட்டுதல்களை பெற்றது.

என்னென்ன பதவிகள்?
- தேனி மாவட்ட எஸ்பி
- தூத்துக்குடி மாவட்ட எஸ்பி
- சென்னை பூக்கடை துணை ஆணையர்
- போக்குவரத்து பிரிவு துணை ஆணையர்
- சிபிஐ அதிகாரி
- சிபிசிஐடி ஐஜி
- மதுரை ஆணையர்
- சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர்
- டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி
- கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி
- சென்னை காவல் ஆணையர்
- போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி
- தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி
- எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் (தற்போதைய பதவி)
- தமிழ்நாடின் டிஜிபி (இனி)
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்






















