மேலும் அறிய

விஸ்வரூபம் எடுக்கும் நீட் முறைகேடு விவகாரம்.. 13 பேரை கஸ்டடியில் எடுத்த சிபிஐ!

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக பீகாரில் 13 பேரை காவலில் எடுத்துள்ளது சிபிஐ. காவலில் எடுத்து விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீட் தேர்வு மோசடி விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விஸ்வரூபம் எடுக்கும் நீட் முறைகேடு விவகாரம்: கடும் அழுத்தத்தை தொடர்ந்து நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் பலரை கைது செய்தனர்.

இந்த நிலையில், பீகாரில் 13 பேரை காவலில் எடுத்துள்ளது சிபிஐ. காவலில் எடுத்து விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ராகேஷ் ரஞ்சன் ஏற்கனவே, சிபிஐ காவலில் உள்ளார்.

அவருடன் சேர்த்து மற்றவர்களையும் நேருக்கு நேர் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். நிதிஷ் குமார், அகிலேஷ் குமார், சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து, ஆயுஷ் குமார், பிட்டு குமார், அமித் ஆனந்த், அசுதோஷ் குமார், ரோஷன் குமார், அனுராக் யாதவ், அபிஷேக் குமார், அவதேஷ் குமார், ஷிவ்நந்தன் குமார், ரீனா குமாரி உள்ளிட்ட 13 பேர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி காட்டும் சிபிஐ: ஹசாரிபாக் ஒயாசிஸ் பள்ளி முதல்வர் அஹ்சனுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் உட்பட பல சந்தேக நபர்கள் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ளனர். நீட் தேர்வு நாளில் அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இந்தி நாளிதழ் பத்திரிகையாளர் ஜமாலுதீன் என்பவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், தன்பாத்தில் கைது செய்யப்பட்ட அமன் சிங்கை சிபிஐ காவலில் எடுத்துள்ளது. நீட் தேர்வு கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயால் தவறாக கைது செய்யப்பட்ட கங்காதர் குண்டே என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 

இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
Ghibli Images: கிப்லி ஃபோட்டோஸ் என்றால் என்ன? காசே வேண்டாம், இலவசமாக மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!
Ghibli Images: கிப்லி ஃபோட்டோஸ் என்றால் என்ன? காசே வேண்டாம், இலவசமாக மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Ugadi 2025 Wishes: உகாதி கொண்டாட்டம் - வாழ்த்து மெசேஜ், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ், ஸ்டோரிக்கான புகைப்படங்கள்
Embed widget