மேலும் அறிய

Video - Monkey Funeral | 1500 பேருக்கு விருந்து.. கொரோனாவுக்கு பயமில்லாமல் குரங்கின் இறுதிச்சடங்குக்கு அழுத கிராமம்.. கடுப்பான போலீஸ்

இறுதிச் சடங்கிற்காக சுமார் 1,500 பேர் கூடியிருந்ததை அடுத்து, கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல வித்யாசமான கிராமங்களை நாம் கண்டுள்ளோம், நாம் வாழும் இடங்களுக்கு அருகிலேயே வித்யாசமான நடைமுறை கொண்ட கிராமங்கள், வினோத பாரம்பரியங்கள் கொண்ட கிராமங்களை கண்டுள்ளோம். குரங்குகள் இறந்தால் மனிதர்களை போலவே இறுதி சடங்கு நடத்தும் கிராமம் ஒன்று இந்தியாவில் உள்ளது. கொரோனா பெருந்தோற்று காலகட்டத்தில் மனிதர்கள் இருந்தாலே ஓரிரு நாட்களுக்கு மேல் வருந்துவதற்கு நேரமின்றி வாழ்க்கை உருண்டுகொண்டிருக்க, இறந்துபோன குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்தி அதில் 1500 பேருக்கு உணவளித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமம்.

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் டிசம்பர் 29 அன்று குளிரால் இறந்த லாங்கூர் வகை குரங்கின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக சுமார் 1,500 பேருக்கு கிராம மக்கள் நேற்று விருந்து அளித்தனர். இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, கிராம மக்கள் பணம் சேகரித்து, அறிவிப்பு அட்டைகள் அச்சிட்டு 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஒரு பெரிய பந்தலின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் விருந்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது.

Video - Monkey Funeral | 1500 பேருக்கு விருந்து.. கொரோனாவுக்கு பயமில்லாமல் குரங்கின் இறுதிச்சடங்குக்கு அழுத கிராமம்.. கடுப்பான போலீஸ்

கடந்த டிசம்பர் 29 அன்று குரங்கு இறந்ததால் வேதனையடைந்த ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வசிப்பவர்கள் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்தனர். மக்கள் குரங்கின் சடலத்தை தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது, பாடல்கள் பாடிக்கொண்டே தூக்கிச்செல்லும் இறுதி ஊர்வல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. ஹரி சிங் என்ற இளைஞர் இந்து முறைப்படி குரங்கிற்காக மொட்டை அடித்துக் கொண்டார். உயிரிழந்த இந்த குரங்கு செல்லபிராணியாக வளர்க்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றதால் மக்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். அந்த உடல் தகன நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர். நேற்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளிவந்தது. குரங்கின் இறுதிச் சடங்கிற்காக சுமார் 1,500 பேர் கூடியிருந்ததை அடுத்து, கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“எங்கள் கிராமத்தில் ஒரு குரங்கு இங்கே இறந்தால், மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதி சடங்குகளை கிராம மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது வழக்கம். இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது, அதில் 1,500 பேர் கலந்து கொண்டனர்,” என்று தலுபுரா கிராமத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் சிங் சவுகான் திங்களன்று PTI இடம் கூறினார்.

குரங்குகளை அனுமனின் அவதாரம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள், என்று லங்கூரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அவர் கூறியிருந்தார். லங்கூர் டிசம்பர் 29 அன்று கிராமத்திற்குள் வந்தபோது குளிரின் காரணமாக மிகவும் துன்பப்பட்டுள்ளது. பின்னர் நோய்வாய்ப்பட்ட குரங்கினை கிராம மக்கள் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். கால்நடை மருத்துவமனையில் சூடான ஆடைகளை வழங்கிய போதிலும் அதனால் குளிரை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு சில மணிநேரங்களில் குரங்கு உயிர் பிரிந்தது. அதனால் கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

வேகமாக பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா நெருக்கடி இருக்கும் சூழலில், பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கோவிட் நெறிமுறைகளை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது, மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget