மேலும் அறிய

Video - Monkey Funeral | 1500 பேருக்கு விருந்து.. கொரோனாவுக்கு பயமில்லாமல் குரங்கின் இறுதிச்சடங்குக்கு அழுத கிராமம்.. கடுப்பான போலீஸ்

இறுதிச் சடங்கிற்காக சுமார் 1,500 பேர் கூடியிருந்ததை அடுத்து, கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல வித்யாசமான கிராமங்களை நாம் கண்டுள்ளோம், நாம் வாழும் இடங்களுக்கு அருகிலேயே வித்யாசமான நடைமுறை கொண்ட கிராமங்கள், வினோத பாரம்பரியங்கள் கொண்ட கிராமங்களை கண்டுள்ளோம். குரங்குகள் இறந்தால் மனிதர்களை போலவே இறுதி சடங்கு நடத்தும் கிராமம் ஒன்று இந்தியாவில் உள்ளது. கொரோனா பெருந்தோற்று காலகட்டத்தில் மனிதர்கள் இருந்தாலே ஓரிரு நாட்களுக்கு மேல் வருந்துவதற்கு நேரமின்றி வாழ்க்கை உருண்டுகொண்டிருக்க, இறந்துபோன குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்தி அதில் 1500 பேருக்கு உணவளித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமம்.

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் டிசம்பர் 29 அன்று குளிரால் இறந்த லாங்கூர் வகை குரங்கின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக சுமார் 1,500 பேருக்கு கிராம மக்கள் நேற்று விருந்து அளித்தனர். இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, கிராம மக்கள் பணம் சேகரித்து, அறிவிப்பு அட்டைகள் அச்சிட்டு 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஒரு பெரிய பந்தலின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் விருந்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது.

Video - Monkey Funeral | 1500 பேருக்கு விருந்து.. கொரோனாவுக்கு பயமில்லாமல் குரங்கின் இறுதிச்சடங்குக்கு அழுத கிராமம்.. கடுப்பான போலீஸ்

கடந்த டிசம்பர் 29 அன்று குரங்கு இறந்ததால் வேதனையடைந்த ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வசிப்பவர்கள் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்தனர். மக்கள் குரங்கின் சடலத்தை தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது, பாடல்கள் பாடிக்கொண்டே தூக்கிச்செல்லும் இறுதி ஊர்வல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. ஹரி சிங் என்ற இளைஞர் இந்து முறைப்படி குரங்கிற்காக மொட்டை அடித்துக் கொண்டார். உயிரிழந்த இந்த குரங்கு செல்லபிராணியாக வளர்க்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றதால் மக்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். அந்த உடல் தகன நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர். நேற்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளிவந்தது. குரங்கின் இறுதிச் சடங்கிற்காக சுமார் 1,500 பேர் கூடியிருந்ததை அடுத்து, கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“எங்கள் கிராமத்தில் ஒரு குரங்கு இங்கே இறந்தால், மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதி சடங்குகளை கிராம மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது வழக்கம். இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது, அதில் 1,500 பேர் கலந்து கொண்டனர்,” என்று தலுபுரா கிராமத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் சிங் சவுகான் திங்களன்று PTI இடம் கூறினார்.

குரங்குகளை அனுமனின் அவதாரம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள், என்று லங்கூரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அவர் கூறியிருந்தார். லங்கூர் டிசம்பர் 29 அன்று கிராமத்திற்குள் வந்தபோது குளிரின் காரணமாக மிகவும் துன்பப்பட்டுள்ளது. பின்னர் நோய்வாய்ப்பட்ட குரங்கினை கிராம மக்கள் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். கால்நடை மருத்துவமனையில் சூடான ஆடைகளை வழங்கிய போதிலும் அதனால் குளிரை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு சில மணிநேரங்களில் குரங்கு உயிர் பிரிந்தது. அதனால் கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

வேகமாக பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா நெருக்கடி இருக்கும் சூழலில், பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கோவிட் நெறிமுறைகளை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது, மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget