மேலும் அறிய

India Transformation : உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும்...மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தகவல்..!

கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாக மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின்  உந்துசக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக உருவெடுக்கும் இந்தியா:

கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்தாண்டு காலங்களில் உலகளவில்  சந்தை மற்றும் குறு நிறுவனங்களின் தலைசிறந்தப் பங்களிப்பின் மூலம் இந்தியா முன்னணி நாடாக  முன்னேறியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகளில், இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என்றும், பங்குச்சந்தைகளில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள  மாற்றங்கள் சர்வதேச அளவிலான முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செலவீன மூலதனத்தில் புதிய உச்சம்:

பத்து மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விநியோகத்திற்கு உகந்த கொள்கை  சீர்திருத்தங்கள், பொருளாதார மேம்பாடு, நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை, அந்நிய நேரடி முதலீடு, பணவீக்க இலக்கு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கை. மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளை தேர்வு செய்யும் அணுகுமுறையே இத்தகைய மாற்றங்களுக்கு வித்திட்டு பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்திருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்:

இதன் பலனாக உற்பத்தியிலும், செலவீன மூலதனத்திலும்  புதிய உச்சம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்குகள், 2031 ஆம் ஆண்டில் 4.5% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டுன் ஒப்பிடும் போது சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்.

இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போது 2,200 டாலராக இருப்பதாகவும், இது வரும் 2032 ஆம் நிதியாண்டில் 5,200 டாலராக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள், உலகளாவிய  நிதி நெருக்கடி ஆகிவற்றுடன் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின்  விலையேற்றம்  மற்றும் திறமைமிக்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Embed widget