மேலும் அறிய

வெறும் எஃப்.ஐ.ஆர்கள், வெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காது: உச்சநீதிமன்றம் கருத்து

வெறும் எஃப்ஐஆர்கள் மட்டுமே வெறுப்புப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வெறும் எஃப்ஐஆர்கள் மட்டுமே வெறுப்புப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தடுப்பது என்பது தேசத்தில் சமூக நல்லிணக்கத்தை பேண அவசியமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வெறுப்புப் பேச்சுகள் என்பது அரசியலும் மதமும் எப்போதும் தனித்தனியாக பார்க்கப்படுகிறதோ, எப்போது அரசியலுக்காக அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துகின்றனரோ அப்போது நின்றுவிடும் என்று தெரிவித்துள்ளது. 

நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்தினா அடங்கிய அமர்வு வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பது என்பது மத நல்லிணக்கத்தைப் பேண மிகவும் அவசியமானது என்று தெரிவித்தனர். மேலும், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதாவது வெறுப்புப் பேச்சுகள் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்வது தாண்டி என்ன மாதிரியான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று விளக்க வேண்டும் என்றனர். அப்போது மேத்தா, இதுவரை வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக 18 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். 

இந்திய அரசியலமைப்பு இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக வரையறுத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதியன்று டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட் மாநில அரசுகள் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் கடுமையாக நடக்க வேண்டும். புகாருக்காக காத்திருக்காமல் குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது.

மேலும், வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது என்பது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கவனிக்கத்தக்க வழக்கு:

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். வெறுப்புப் பேச்சுக்கள் நம் நாட்டில் லாபம் தரும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு அரசியல் கட்சி ஒன்று நிதியுதவி செய்ததைக் குறிப்பிடலாம். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் முன்வைத்த கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் யுயு லலித், எஸ்ஆர் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மனுதாரர் தமது மனுவில் வெறுப்புப் பேச்சுக்களால் தேசத்தின் ஒட்டுமொத்த சூழல் மீதும் கறைபடியும் எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்பது சரியானதே. அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் இருக்கலாம். அது ஏற்கத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால்,மனுவில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே தெளிவாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 58 வெறுப்புப் பிரச்சார சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சம்வங்களுக்கான விவரம் இல்லையே. யார் பேசியது? வழக்குப் பதியப்பட்டதா என்ற விவரமும் இல்லை. இது தொடர்பாக மனுதாரர் மேலும் தகவல்களை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Embed widget