மேலும் அறிய

Crime : மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட கணித ஆசிரியர்...குறைந்த மதிப்பெண்களை கொடுத்ததால் கொடூரம்

பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர் மற்றும் எழுத்தர் ஆகியோர் 9ஆம் வகுப்பு நடைமுறைத் தேர்வில் மதிப்பெண் குறைவாகக் கொடுத்ததாகக் கூறி மாணவர்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியர் மற்றும் எழுத்தர் ஆகியோர் 9ஆம் வகுப்பு நடைமுறைத் தேர்வில் மதிப்பெண் குறைவாகக் கொடுத்ததாகக் கூறி மாணவர்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாவட்டத்தின் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு நடத்தும் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமையன்று ஜார்கண்ட் கல்விக் கவுன்சில் (ஜேஏசி) வெளியிட்ட முடிவுகளில் 9 ஆம் வகுப்பு தேர்வில், 32 பேரில் 11 மாணவர்கள் தோல்விக்கு சமமாகக் கருதப்படும் 'டிடி' (டபுள் டி) கிரேடு பெற்றுள்ளனர்.

"சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து தெரிய வந்த பிறகு, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், மாணவர்களின் வாழ்க்கை கெட்டு விடும் என்று கூறி பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது” என்று கோபிகாந்தர் காவல் நிலையப் பொறுப்பாளர் நித்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தாக்கப்பட்ட ஆசிரியர் சுமன் குமார் என்றும் எழுத்தராக சோனேராம் சௌரே என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை" என்றார்.

போக்தாவுடன் கோபிகாந்தர் தொகுதி மேம்பாட்டு அலுவலர் (BDO) ஆனந்த் ஜா விசாரணைக்காக பள்ளிக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "குடியிருப்புப் பள்ளியில் 200 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் முன்பு பள்ளியின் தலைமையாசிரியராக பதவி வகித்துள்ளார்.

ஆனால், பின்னர் தெரியாத காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டார். ஆசிரியர்கள் இடையேயான போட்டியின் காரணமாக அவர் நீக்கப்பட்டிருக்கலாம். பள்ளியின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்" என்றார்.

நடைமுறைத் தேர்வில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதனால் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்கண்ட் கல்வி கவுன்சிலின் தளத்தில் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றியவர் எழுத்தர் என்பதால் அவரும் தாக்கப்பட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget