மேலும் அறிய

பதற்றத்தை ஏற்படுத்தும் மணிப்பூர் கலவரம்..கண்டவுடன் சுட உத்தரவு...ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு..!

மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய ஒற்றுமை பேரணியில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய ஒற்றுமை பேரணியில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், மோசமான நிலைகளில் கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவை வழங்க மாவட்ட ஆட்சியர், துணை மண்டல ஆட்சியர் ஆகியோருக்கு ஆளுநர் அதிகாரம் வழங்கியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு பொது ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, 9,000 பேர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.

மணிப்பூரில் என்ன பிரச்னை?

மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.

பழங்குடியினரின் கோரிக்கைதான் என்ன?

"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.

இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் அரசும் மாநிலத்தில் இணைய வசதியை நிறுத்தியது. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Embed widget