மேலும் அறிய

பாலியல் தொல்லை?! விசாரணையின் போது உடம்பு முடியல.. மருத்துவமனை சிகிச்சையில் கர்நாடக மடாதிபதி!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு கைது செய்யப்பட்ட பிறகு மடாதிபதியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிறைக்கு அனுப்பப்பட்ட உடனேயே அவருக்கு சில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட உடனேயே, இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே. பரசுராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரவுக்குப் பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்" என்றார்.

மாநிலத்தின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க லிங்காயத் பிரிவு தலைவரான சிவமூர்த்தி முருகாவை, இந்த வழக்கின் விசாரணை அலுவலரான துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரித்தார். பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரது இல்லத்தில், முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். முருகா மடத்தின் மடாதிபதியுடன் மேலும் நால்வர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதிக்கு எதிரான விசாரணை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு வழக்கறிஞர்கள் குழு வியாழக்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. "அவர் (பார்வையாளர்) விசாரணைக்காகவோ அல்லது அவரது மருத்துவப் பரிசோதனைக்காகவோ கூட அழைக்கப்படவில்லை. விசாரணையில் உள்ள இந்த குறைபாடுகள், விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது" என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மடம் நடத்தும் பாடசாலையில் கல்வி கற்பதற்காக விடுதியில் தங்கியிருந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும், மடத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். இவர்கள்தான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
முர்மு விவகாரம்-வலுக்கும் கண்டனம், இந்தியாவிற்கு சீனா அழைப்பு, ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட் - 11 மணி செய்திகள்
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
தொழிலாளர் புரட்சி முதல் உலக அங்கீகாரம் வரை.. மகளிர் தினத்தின் வரலாறு இது தான்.. மார்ச் 8 உருவான கதை
தொழிலாளர் புரட்சி முதல் உலக அங்கீகாரம் வரை.. மகளிர் தினத்தின் வரலாறு இது தான்.. மார்ச் 8 உருவான கதை
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
Embed widget