மேலும் அறிய

பாலியல் தொல்லை?! விசாரணையின் போது உடம்பு முடியல.. மருத்துவமனை சிகிச்சையில் கர்நாடக மடாதிபதி!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு கைது செய்யப்பட்ட பிறகு மடாதிபதியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிறைக்கு அனுப்பப்பட்ட உடனேயே அவருக்கு சில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட உடனேயே, இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே. பரசுராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரவுக்குப் பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்" என்றார்.

மாநிலத்தின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க லிங்காயத் பிரிவு தலைவரான சிவமூர்த்தி முருகாவை, இந்த வழக்கின் விசாரணை அலுவலரான துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரித்தார். பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரது இல்லத்தில், முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். முருகா மடத்தின் மடாதிபதியுடன் மேலும் நால்வர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதிக்கு எதிரான விசாரணை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு வழக்கறிஞர்கள் குழு வியாழக்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. "அவர் (பார்வையாளர்) விசாரணைக்காகவோ அல்லது அவரது மருத்துவப் பரிசோதனைக்காகவோ கூட அழைக்கப்படவில்லை. விசாரணையில் உள்ள இந்த குறைபாடுகள், விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது" என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மடம் நடத்தும் பாடசாலையில் கல்வி கற்பதற்காக விடுதியில் தங்கியிருந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும், மடத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். இவர்கள்தான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Embed widget