மேலும் அறிய

பாலியல் தொல்லை?! விசாரணையின் போது உடம்பு முடியல.. மருத்துவமனை சிகிச்சையில் கர்நாடக மடாதிபதி!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு கைது செய்யப்பட்ட பிறகு மடாதிபதியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிறைக்கு அனுப்பப்பட்ட உடனேயே அவருக்கு சில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட உடனேயே, இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே. பரசுராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரவுக்குப் பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்" என்றார்.

மாநிலத்தின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க லிங்காயத் பிரிவு தலைவரான சிவமூர்த்தி முருகாவை, இந்த வழக்கின் விசாரணை அலுவலரான துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரித்தார். பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரது இல்லத்தில், முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். முருகா மடத்தின் மடாதிபதியுடன் மேலும் நால்வர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதிக்கு எதிரான விசாரணை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு வழக்கறிஞர்கள் குழு வியாழக்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. "அவர் (பார்வையாளர்) விசாரணைக்காகவோ அல்லது அவரது மருத்துவப் பரிசோதனைக்காகவோ கூட அழைக்கப்படவில்லை. விசாரணையில் உள்ள இந்த குறைபாடுகள், விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது" என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மடம் நடத்தும் பாடசாலையில் கல்வி கற்பதற்காக விடுதியில் தங்கியிருந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும், மடத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். இவர்கள்தான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
Embed widget