மேலும் அறிய

பாலியல் தொல்லை?! விசாரணையின் போது உடம்பு முடியல.. மருத்துவமனை சிகிச்சையில் கர்நாடக மடாதிபதி!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையில் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு கைது செய்யப்பட்ட பிறகு மடாதிபதியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிறைக்கு அனுப்பப்பட்ட உடனேயே அவருக்கு சில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட உடனேயே, இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே. பரசுராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரவுக்குப் பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார்" என்றார்.

மாநிலத்தின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க லிங்காயத் பிரிவு தலைவரான சிவமூர்த்தி முருகாவை, இந்த வழக்கின் விசாரணை அலுவலரான துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரித்தார். பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரது இல்லத்தில், முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். முருகா மடத்தின் மடாதிபதியுடன் மேலும் நால்வர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதிக்கு எதிரான விசாரணை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலுக்கு வழக்கறிஞர்கள் குழு வியாழக்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. "அவர் (பார்வையாளர்) விசாரணைக்காகவோ அல்லது அவரது மருத்துவப் பரிசோதனைக்காகவோ கூட அழைக்கப்படவில்லை. விசாரணையில் உள்ள இந்த குறைபாடுகள், விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது" என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மடம் நடத்தும் பாடசாலையில் கல்வி கற்பதற்காக விடுதியில் தங்கியிருந்த 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும், மடத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். இவர்கள்தான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget