மேலும் அறிய

Cauvery Water: தமிழக விவசாயிகளை மதிக்கிறேன்.. மேகதாது கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும்தான்.. மனம் திறந்த கர்நாடக துணை முதலமைச்சர்

தமிழ்நாடு விவசாயிகளை மதிக்கிறேன் ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடாக அரசு திறந்துவிட்டுள்ளது. அதன்படி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு நொடிக்கு 4,398 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மைசூரில் உள்ள கபினி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை, கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடும் அளவு 7,329 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு:

தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த நிலையில், கர்நாடகாவில் வறட்சி நிலவி வருவதாக கூறி, கர்நாடக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து, ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தண்ணீரை திறந்து விட்டால் போராட்டம் நடத்துவோம் என பல்வேறு விவசாய அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

"ஒரே தீர்வு மேகதாது திட்டம்தான்"

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "இதற்கு ஒரே தீர்வு மேகதாது திட்டம்தான். கர்நாடகாவில் உள்ள இடங்களைப் பார்வையிட்டு, எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பார்க்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இன்று அனைத்து சட்ட வல்லுனர்களையும் சந்தித்து பேசினோம். தற்போது, ​​கர்நாடகா சார்பில் ஆஜரான எங்கள் மூத்த வழக்கறிஞரை சந்திக்க ஒட்டுமொத்த குழுவும் சென்று கொண்டிருக்கிறது. 5,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் கர்நாடகாவுக்கு பெரும் வேதனை.

மழை இல்லை. கர்நாடகாவின் உணர்வுகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு விவசாயிகளையும் மதிக்கிறோம். ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேகதாதுதான் தீர்வு என்பதே எங்களின் வேண்டுகோள். மேகதாது கர்நாடகாவுக்கு இல்லை. அது தமிநாட்டுக்கும் உதவும்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. நீரை திறந்துவிடவில்லை என்றால், வழக்கு விசாரணையின்போது, கர்நாடக அரசுக்கு உச்ச நிதிமன்றம் கண்டனம் தெரிவித்துவிடும் என்பதால் கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, கர்நாடக ராஜா ரைதா சங்கா அமைப்பை சேர்ந்த விவசாயிகள், கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget