மேலும் அறிய

Adani and IRCTC : இந்தியன் ரயில்வேஸுக்கு போட்டியாக மாறுகிறதா அதானி குழுமம்..? என்னதான் நடக்கிறது?..ஐஆர்சிடிசி விளக்கம்..!

இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 14.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 81% இ-டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) நிறுவனம் மூலம்தான் இந்தியன் ரயில்வே டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதேபோல, ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் ரயில்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும் ட்ரெயின்மேன் செயலி பயன்படுகிறது.

இந்தியன் ரயில்வேஸுக்கு போட்டியாக மாறுகிறதா அதானி குழுமம்..?

இந்நிலையில், அதானி குழுமம், ட்ரெயின்மேன் செயலியை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. தற்போது, ஐஆர்சிடிசி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.  ட்விட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐஆர்சிடிசி, "அதானிக்கு சொந்தமான இயங்குதளம், ஐஆர்சிடிசியுடன் இணைந்து செயலபட்டு வருகிறது. இந்த சூழலில், உரிமையாளர் மாறுவதால் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது.

ஐஆர்சிடிசியின் 32 கூட்டு நிறுவனங்களில் ட்ரெயின்மேனும் ஒன்று. முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில் 0.13 சதவிகித டிக்கெட்டுகள் ட்ரெயின்மேன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 14.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 81% இ-டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி மூலம் பதிவு செய்யப்படுகின்றன. பரப்பப்படுவது ஒரு தவறான தகவல். ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட 32 கூட்டு நிறுவனங்களில் ட்ரெயின்மேனும் ஒன்று. அதன் பங்குகளை வாங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

விளக்கம் அளித்த ஐஆர்சிடிசி:

அனைத்து விதமான ஒருங்கிணைப்பும் செயல்பாடுகளும் ஐஆர்சிடிசி மூலமே தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இது, ஐஆர்சிடிசிக்கு உதவிகரமாக இருக்கும். ஐஆர்சிடிசிக்கு அச்சுறுத்தலாகவோ சவாலாகவோ இருக்காது" என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி குழுமம் முதலில் ஐஆர்சிடிசியுடன் போட்டியிட்டு அதன் பிறகு அதை கைப்பற்றும்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஐஆர்சிடிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "டிக்கெட் விற்பனையை எளிதாக்கி மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் B2B, EGovernance, B2C போன்ற திட்டங்களின் கீழ் பல ஏஜென்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். மேலும்  ஐஆர்சிடிசி மற்றும் அதன் முகவர்களுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கிவரும் ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிவருகிறது. இந்தியாவில் தினந்தோறும் சுமார் 2.5 கோடிப் பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். உலகில் 4ஆவது மிகப்பெரிய அரசுத்துறையாக விளங்கிவரும் இந்திய ரயில்வேயில், சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். 

இதற்கிடையே, ரயில்வே துறையைத் தனியாரிடம் கொடுக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, ரயில்வே ஊழியர்களும் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget