மேலும் அறிய

இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்..!

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்ற கருத்தை, கடந்த 2021ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் மோடி முன்னதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையிலேயே இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கோஸ்டாரிகா, நெதர்லாந்து, தென் கொரியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய ஜனநாயகத்தின் உச்சி மாநாட்டில் இணையம் வழியாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல. சமத்துவ உணர்வு என கூறியுள்ளார்.

மகாபாரதம், வேதத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி:

இதில் விரிவாக பேசிய மோடி, "மகாபாரதம், வேதங்கள் மற்றும் அனைத்து வரலாற்றுக் குறிப்புகளும், ஒரே குடும்பத்தை சேராத ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் சிந்தனை பண்டைய இந்தியாவில், உலகின் பிற பகுதிகளுக்கு முன்பே ஒரு பொதுவான அம்சமாக இருந்தது. 

பண்டைய இந்தியாவில் இருந்த குடியரசு மாநிலங்களில் ஒரு குடும்பத்தை சேராத ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன. 

அப்படியானால், உண்மையில், இந்தியாதான் ஜனநாயகத்தின் தாயகம். மகாபாரதத்தில் குடிமக்களின் முதல் கடமை அவர்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று விவரிக்கப்பட்டுள்ளது. பரந்த அடிப்படையிலான ஆலோசனை அமைப்புகளால் செயல்படுத்தப்படும் அரசியல் அதிகாரத்தைப் பற்றி வேதங்கள் பேசுகின்றன" என்றார்.

இந்தியாவின் சவால்கள்:

காலநிலை மாற்றம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பேசிய அவர், "இந்தியாவுக்கு பல உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதுவே உலகின் ஜனநாயகத்திற்கான சிறந்த விளம்பரம்" என்றார்.

உச்ச மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "கருத்துச் சுதந்திரம் வீழ்ச்சியில் உள்ளது. எதிர்ப்புக் குரல்கள் மௌனிக்கப்படுகின்றன. மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர், அதே சமயம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள் பழிவாங்கலை எதிர்கொள்கின்றனர்" என்றார்.

இந்த உச்ச மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனநாயகத்தின் உச்ச மாநாட்டின் முதல் பதிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் மற்றும் மாலத்தீவுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

ஆனால், பூடான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தபோதிலும், கடந்த முறையை போன்றே இந்த முறையும் சீனாவுக்கு அழைப்பு விடுக்காத காரணத்தால் உச்ச மாநாட்டை புறக்கணித்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பிரச்னைகளில்  அமெரிக்கா மற்றும் உச்சிமாநாட்டை இணைந்து நடத்திய மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் இருதரப்பு உறவில் ஈடுபடும்" என்றார்.

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்ற கருத்தை, கடந்த 2021ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் மோடி முன்னதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget