மேலும் அறிய

கெளரி லங்கேஷ் படுகொலை: ஜாமினில் வெளிவந்தவர்களுக்கு மலர்மாலை, கெளரவம்.. என்ன நடக்கிறது?

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை வழக்கில், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு, ஸ்ரீராம் சேனா உட்பட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை வழக்கில், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பரசுராம் வாக்மரே மற்றும் மனோஹர் யாதவ் ஆகிய இருவருக்கும், ஸ்ரீராம் சேனா உட்பட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, ‘லங்கேஷ் பத்ரிகே’ நாளிதழின் ஆசிரியரான கெளரி லங்கேஷ், பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் வெளியே இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு, அதில் 8 பேருக்கு பிணை கிடைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய மேலும் எட்டு நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்த எட்டு நபர்களில், சிறையில் இருந்து வெளிவந்த பரசுராம் வாக்மரே மற்றும் மனோகர் யாதவ் என்ற இருவருக்கு, ’ஸ்ரீ ராம சேனா’ உள்ளிட்ட இந்துத்வ அமைப்பினர் மாலையிட்டு வரவேற்பளித்தனர்.

மேலும், காளிகா என்னும் காளி கோவில் ஒன்றில் இருவரும் வழிபாடு நடத்தி தேவி சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். பின்னர் அருகிலுள்ள சத்ரபதி சிவாஜி மன்னர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்துள்ளனர். இதுதொடர்பான காணொளி வெளியாகி, அவை இணையத்தில் சுற்றலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்துத்வ அமைப்பினர் சார்பாக அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, கோஷங்கள் எழுப்பி மரியாதை செய்யப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது

நாடறிந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Public Examinaton: 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
Public Examinaton: 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12th Exam Date: மாணவர்களே! 12ம் வகுப்புக்கு எந்த தேதியில் என்ன தேர்வுகள்? தெள்ளத் தெளிவாக உள்ளே
12th Exam Date: மாணவர்களே! 12ம் வகுப்புக்கு எந்த தேதியில் என்ன தேர்வுகள்? தெள்ளத் தெளிவாக உள்ளே
Breaking News LIVE: தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
Breaking News LIVE: தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
தொடங்கியது மழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன ? உஷாரா இருங்க மக்களே
தொடங்கியது மழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன ? உஷாரா இருங்க மக்களே
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai rain : நாங்க ரெடி! நீங்க ரெடியா? புரட்டி போடப்போகும் மழை! சென்னை மாநகராட்சி அட்வைஸ்Prisoners Ramayana | சிறையில் ராமாயண நாடகம்! சீதையை தேடுவது போல் எஸ்கேப்! கம்பி நீட்டிய வானர கைதிகள்Baba Siddique | EX மினிஸ்டர் சுட்டுக் கொலை! சல்மானை மிரட்டிய அதே ரவுடி? மிரள வைக்கும் பின்னணிKalaignar park zipline | ஜிப்லைனில் சிக்கி அலறிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Public Examinaton: 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
Public Examinaton: 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12th Exam Date: மாணவர்களே! 12ம் வகுப்புக்கு எந்த தேதியில் என்ன தேர்வுகள்? தெள்ளத் தெளிவாக உள்ளே
12th Exam Date: மாணவர்களே! 12ம் வகுப்புக்கு எந்த தேதியில் என்ன தேர்வுகள்? தெள்ளத் தெளிவாக உள்ளே
Breaking News LIVE: தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
Breaking News LIVE: தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
தொடங்கியது மழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன ? உஷாரா இருங்க மக்களே
தொடங்கியது மழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன ? உஷாரா இருங்க மக்களே
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட மக்களே.. மழை அப்டேட் இதோ..
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட மக்களே.. மழை அப்டேட் இதோ..
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை?
Jammu And Kashmir: 7 ஆண்டுகளுக்குப் பிறகு - ஜம்மு & காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி முடிந்தது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Jammu And Kashmir: 7 ஆண்டுகளுக்குப் பிறகு - ஜம்மு & காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி முடிந்தது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Womens T20 Worldcup: பாகிஸ்தான் வெல்லுமா? இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா? மகளிர் டி20 உலகக் கோப்பை..!
Womens T20 Worldcup: பாகிஸ்தான் வெல்லுமா? இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா? மகளிர் டி20 உலகக் கோப்பை..!
Embed widget