மேலும் அறிய

'மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 

கொரோனா பேரிழப்பில் இருந்து நம்மையும் நம் சுற்றத்தையும் காக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் https://www.cowin.gov.in/home  என்ற இணையதளத்திலோ அல்லது  ஆரோக்கிய சேது ( Arogya Setu app) செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து தடுப்பூசியை பெறலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள சுகாதார மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ தடுப்பூசியை நேரடியாக சென்று பெறலாம். 


மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

தற்போது கிராமங்களில் ஊராட்சி மூலமாகவும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக்கொண்டு அந்த வயதினர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். 
இந்நிலையில்  தடுப்பூசி தொடர்பாக கேட்கப்பட்ட சில பொதுவான கேள்விகளுக்கு கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட்டரின் பதிலளித்துள்ளார். 

  • அடிக்கடி மது அருந்துபவர்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா?

ஆம் என்பது தான் பதில். 

  • அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? 

பிரியாணி உள்ளிட்ட உங்களுக்கு பிடித்த எந்த உணவையும் கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் சாப்பிடலாம்.

  • இதற்கு முன்னதாக அம்மை, தோல் ஒவ்வாமை, ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, இதய பிரச்னை இருந்தால் தடுப்பூசி போடலாமா?

கண்டிப்பாக போடலாம்

  • பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

மே மாதம் வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பின்படி பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.


மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தேசிய வல்லுநர்கள் குழு பரிந்துரையின்படி தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான புதிய நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. 

  • கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது. அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. 
  • முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். 


மது அருந்துபவர்கள்.. பாலூட்டும் தாய்மார்கள்..' கொரோனா தடுப்பூசியும் பொதுவான கேள்வி, பதிலும்!

  • வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பிக்கு பின்பு நெகட்டிவ் பெற்றவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.
  • பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
  • கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
  • கர்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முடிவு குறித்து வல்லுநர்கள் குழு பரிசீலித்து வருகிறது.

அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!


 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget