மேலும் அறிய

அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!

‛நான் எனது இரண்டு தடுப்பூசிகளையும் மாதவிடாய் இருந்தபோதே போட்டுக் கொண்டேன். எனக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கொரோனா தடுப்பூசியால் மிகமிகக் குறைந்த அளவிலேயே பக்கவிளைவுகள் இருக்கும். அவையும் மிகச் சாதாரணமாக எல்லா தடுப்பூசிகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றதே,’ என டுவிட் செய்துள்ளார் பெண் மருத்துவர் ஒருவர்.

அந்த மூன்று நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? எச்சரிக்கும் வாட்ஸ் அப் ஃபார்வர்டுகள்; என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள் இதோ பார்க்கலாம்.

கொரோனா பரவல் வேகமெடுத்த நாள் முதல் மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தின் மிக முக்கிய வேலையாக இருப்பது அன்றாடம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் அபத்தமான, போலியான தகவல்களை இல்லை என மக்களுக்குப் புரியவைப்பதே.
தடுப்பூசி பற்றி அப்படியாக வெளியான ஆயிரமாயிரம் போலித் தகவல்களையும் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் உடைத்து இப்போதுதான் மக்களுக்கு பெருமளவில் நம்பிக்கை தந்திருக்கிறது ஊடகங்கள்.
இந்நிலையில், இன்னுமொரு வதந்தி இப்போது இளம்பெண்களைக் குறிவைத்து பரப்பப்படுகிறது. அதாவது மாதவிடாய் நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பதே அந்த வதந்தி.
இப்போது, மூன்றாவது கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.


அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!
தடுப்பூசியே பேராயுதம் என உலகமே நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அது அவர்களின் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும், பின்னாளில் குழந்தைப் பேறைப் பாதிக்கும் என அச்சுறுத்தும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பாக அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பேராசிரியர், மருத்துவர் கேத்ரின் க்ளேன்சி கொரோனா தடுப்பூசிக்கும் மாதவிடாய்க்கும் தொடர்ப்பு இருப்பதாக பரப்பப்படும் தகவல்களை அடுத்து இது தொடர்பாக ஆய்வு செய்யவிருக்கிறார்.
மகப்பேறு மருத்துவர் முன்ஜால் கப்பாடியா, வாட்ஸ் அப்பில் வெளியாகும் மிகக்கேவலமான சில வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனா தடுப்பூசிக்கும் உங்களுடைய மாதவிடாய் சுழற்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இதுவே உண்மை. இதை முடிந்தளவு பரப்புங்கள். இதுவே இப்போதைய அவசரத் தேவை எனக் கூறியுள்ளார்.


அந்த 3 நாட்களில் தடுப்பூசி போடலாமா? வதந்திகளுக்கு விடையளிக்கும் மருத்துவர்கள்!
இதேபோல், சமூகவலைதளங்களில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், பெண் ஆளுமைகள் எனப் பலரும் தங்களின் தடுப்பூசி அனுபவங்களைப் பகிர்ந்து நம்பிக்கையூட்டி வருகின்றனர்.  ஒரு பெண் மருத்துவர் தனது ட்விட்டரில், நான் எனது இரண்டு தடுப்பூசிகளையும் மாதவிடாய் இருந்தபோதே போட்டுக் கொண்டேன். எனக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கொரோனா தடுப்பூசியால் மிகமிகக் குறைந்த அளவிலேயே பக்கவிளைவுகள் இருக்கும். அவையும் மிகச் சாதாரணமாக எல்லா தடுப்பூசிகளுக்கும் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்றதே.
மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவர், டாக்டர் வைஷாலி ஜோஷி கூறும்போது, "கொரோனா தடுப்பூசிக்கும் மாதவிடாய்ப் பிரச்சினைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது சமூகவலைதளங்களில் சிலர் தங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததை வைத்து கட்டமைக்கப்பட்ட போலித் தகவல். இது அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால், பெண்கள் அனைவரும் தயங்காமல் மாதவிடாய் காலமென்றாலும் கூட தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget