மேலும் அறிய

Delhi Murder Case: டெல்லி கொடூரம்.. துண்டு துண்டாக வெட்டிய காதலன்: மோசமான அந்த உறவில், ஷ்ரத்தா நீடித்ததற்கு காரணம் என்ன?

டாக்ஸிக் உறவாக இருந்தபோதிலும் பெண்கள் அதில் தொடர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் குறிவைத்து கொல்லப்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் 87,000 பெண்கள்/சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாள் ஒன்றுக்கு 137 பெண்கள்/சிறிமிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், காதலரால் மட்டும் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை 30,000 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, கொல்லப்படும் பெண்களில் மூன்றில் ஒருவர், காதலரால் கொல்லப்படுகின்றனர்.

இந்த தரவில் இருந்து டெல்லி ஷ்ரத்தா கொலையை அணுகினால், ஷர்த்தா அவரது காதலர் ஆப்தாப்பால் கொல்லப்பட்டது ஆச்சரியம் அளிக்காது. ஆனால், காதலியை கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எரியும் குணம் கொண்ட நபருடன் ஷ்ரத்தாவால் எப்படி வசிக்க முடிந்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.

டாக்ஸிக் உறவாக இருந்தபோதிலும் பெண்கள் அதில் தொடர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. துன்புறுத்தப்படுகிறோம் என்ற புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை எதிர்நோக்கி இருந்திருக்கலாம். பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து இருந்திருக்கலாம்.

தனிமையில் வாழ்வதற்கு பயம் இருந்திருக்கலாம். சுயமரியாதை குறைவாக இருந்திருக்கலாம். தன்னம்பிக்கை இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். பல நாள்களாக, டாக்ஸிக் உறவில் இருந்தவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு இதுபோன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

சில பெண்கள், தவறான நம்பிக்கைகளின் காரணமாக ஆரோக்கியமற்ற உறவில் இருக்கக்கூடும். அதாவது, துன்புறுத்தும் நபர் உண்மையில் தன்னை நேசிக்கிறார் அல்லது தொடர்ந்து அவருடன் இருந்தால் அவர் மாறக்கூடும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். இம்மாதிரியான தவறான நம்பிக்கைகளே, டாக்ஸிக் உறவில் பெண்கள் விடுபட தடுக்கிறது.

இதுகுறித்து மனநல மருத்துவர் சாந்தினி துக்னைட் கூறுகையில், "பெண்கள் தவறான உறவுகளில் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அவர்கள் வெளியேற பயப்படுவதுதான்.

அவர்கள் வெளியேற முயற்சித்தால், தங்கள் காதலர் தங்களை என்ன செய்வார் என்று அவர்கள் பயப்படலாம் அல்லது அவர்கள் வெளியேறினால் பொருளாதார ரீதியாக தங்களை ஆதரிக்க முடியுமா என்று அவர்கள் கவலைப்படலாம். 

காலப்போக்கில், காதலர் மாறிவிடுவார் அல்லது அனைத்து பிரச்னைகளுக்கும் தான் செய்த தவறு என்று அப்பெண் நம்பி இருக்கலாம். டாக்ஸிக் உறவில் துன்புறுத்தும் நபர்கள், பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறார். 

இந்த தனிமைப்படுத்தல் ஒரு பெண்ணுக்கு உதவியை அணுகுவதை கடினமாக்குகிறது. எனவே, உறவில் இருந்து வெளியேறுவது சாத்தியமற்ற செயலாகத் தோன்றும்" என்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget