மேலும் அறிய

Crime: பூட்டிய அறைக்குள் ரத்த வெள்ளம்.. சடலமாக மீட்கப்பட்ட புதுமண தம்பதிகள்..! நடந்தது என்ன?

சத்தீஸ்கரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று நேரத்திற்கு முன்பு, புதுமணத் தம்பதிகள் வீட்டில் உள்ள அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.

தொடரும் கொடூர கொலைகள்:

இதேபோன்ற சம்பவம் டெல்லியிலும் பின்னர் மும்பையிலும் நடந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, சத்தீஸ்கரில் ஒரு பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று நேரத்திற்கு முன்பு, புதுமணத் தம்பதிகள் வீட்டில் உள்ள அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமண தம்பதிகள்:

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மணமகன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரிஜ்நகரில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.

அஸ்லாம் (24) என்பவருக்கும் கஹ்காஷா பானோ (22) என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்தது. உறவினர் அனைவரும் தங்கள் அறைக்குள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, மணமகளின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் அங்கு விரைந்துள்ளார்.

ரத்தவெள்ளத்தில் மணமக்கள்:

அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. புதுமண தம்பதிகள் பதிலளிக்காததால், குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ​​​​அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு உறுவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று கத்தியால் குத்தப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து கத்தி மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. எனினும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" 

ஷ்ரத்தா கொலை:

முன்னதாக, டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த கொடூர கொலை பற்றி சமீபத்தில் கூட வெளியான தகவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கியுள்ளார் ஆப்தாப்.

கொலை செய்த மூன்று மாதங்களுக்கு பிறகு, ஷ்ரத்தாவின் தலையை ஆப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், பல அறிந்திராத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget