மேலும் அறிய

நெருங்கும் பீகார் தேர்தல்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி.. விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு

Caste Census: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி:

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று இன்று முடிவு செய்துள்ளது" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "காங்கிரஸ் அரசுகள் எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டில், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங், அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை பரிந்துரைத்துள்ளன. இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன?

காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன.

சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தி இருக்கின்றன. அவையும் வெளிப்படையாக நடத்தவில்லை. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. நமது சமூக அமைப்பு அரசியல் காரணங்களால் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க வேண்டும்" என்றார்.

பீகாரில் இந்தாண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில், சாதிவாரி கணக்கெடுப்பை மையப்படுத்தி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தார். அது, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் தந்தது. 99 தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

எந்த சாதி அதிகம் உள்ளது, அதன் சமூக, பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு உதவுகிறது. தேசிய அளவில் எடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தவிர பல மாநிலங்களில் சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா, பீகாரில் ஏற்கனவே சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், தெலங்கானாவில் சாதிவாரி ஆய்வை நடத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget