மேலும் அறிய

நெருங்கும் பீகார் தேர்தல்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி.. விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு

Caste Census: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மோடி:

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று இன்று முடிவு செய்துள்ளது" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "காங்கிரஸ் அரசுகள் எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டில், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங், அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை பரிந்துரைத்துள்ளன. இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன?

காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன.

சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தி இருக்கின்றன. அவையும் வெளிப்படையாக நடத்தவில்லை. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. நமது சமூக அமைப்பு அரசியல் காரணங்களால் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை சேர்க்க வேண்டும்" என்றார்.

பீகாரில் இந்தாண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில், சாதிவாரி கணக்கெடுப்பை மையப்படுத்தி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தார். அது, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் தந்தது. 99 தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

எந்த சாதி அதிகம் உள்ளது, அதன் சமூக, பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு உதவுகிறது. தேசிய அளவில் எடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தவிர பல மாநிலங்களில் சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா, பீகாரில் ஏற்கனவே சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், தெலங்கானாவில் சாதிவாரி ஆய்வை நடத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் ChatGPT-யில் விளம்பரங்கள்: இலவச சேவைக்கு புதிய திருப்பம்!விபரம் இதோ..
இந்தியாவில் ChatGPT-யில் விளம்பரங்கள்: இலவச சேவைக்கு புதிய திருப்பம்!விபரம் இதோ..
பெங்களூரு - கண்ணூர் புதிய சிறப்பு ரயில்: போத்தனூர் வழியாக இயக்கம்! விவரம் இதோ.
பெங்களூரு - கண்ணூர் புதிய சிறப்பு ரயில்: போத்தனூர் வழியாக இயக்கம்! விவரம் இதோ.
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"விஜய் தொகுதியில் 462 அடுக்குமாடி குடியிருப்புகள்..." வீட்டு வசதி வாரியத்தில் மெர்சலான 20 அறிவிப்புகள்
Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?
Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு: அசல் மார்க் ஷீட் எப்போது?
ஒரே சார்ஜில் 301 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது ஓலாவின் OLA S1Z இ ஸ்கூட்டர்!
ஒரே சார்ஜில் 301 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது ஓலாவின் OLA S1Z இ ஸ்கூட்டர்!
NATO மீது NO அட்டாக்.! புதினை எச்சரித்தாரா ட்ரம்ப்.? ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணத்தில் நடந்தது என்ன.?
NATO மீது NO அட்டாக்.! புதினை எச்சரித்தாரா ட்ரம்ப்.? ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணத்தில் நடந்தது என்ன.?
MK Stalin: திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
திமுகவை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் - திமுகவின் மாற்றத்துடன் ஸ்டாலின் நம்பிக்கை
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!
Embed widget