மேலும் அறிய

விவசாய கடன் திட்டத்திற்கு 1.5 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்க அரசு முடிவு

விவசாய கடன் திட்டத்திற்கு 1.5 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விவசாய கடன் திட்டத்திற்கு 1.5 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வட்டி மானிய திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய வட்டி மானிய திட்டத்திற்கு 34,860 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று, வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியத்தை 1.5 சதவீதமாக மீண்டும் உயர்த்தியுள்ளது. 

2022-23 முதல் 2024-25 நிதியாண்டில் விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியத்தை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "2022-23 முதல் 2024-25 நிதியாண்டில், விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களை வழங்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு (பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கி, சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்) 1.5 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 2022-23 முதல் 2024-25 வரையிலான காலக்கட்டத்தில் வட்டி மானியத்திற்கு கூடுதலாக 34,856 ரூபாய் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு தேவைப்படுகிறது. வட்டி மானியம் உயர்த்தப்பட்டிருப்பது விவசாயத் துறையில் கடன் ஓட்டத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் நிதி வலிமை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்து, கிராமப்புற பொருளாதாரத்தில் போதுமான விவசாயக் கடனை உறுதி செய்யும்.

இத்திட்டத்தினால் அதிகரிக்கும் செலவை வங்கிகள் உள்வாங்கி கொள்ள முடியும். குறுகிய கால விவசாயத் தேவைகளுக்காக விவசாயிகளுக்கு கடன்களை வழங்க ஊக்குவிக்கப்படும். அதிக விவசாயிகள் விவசாயக் கடனின் பலனைப் பெற உதவும். கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதால் இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.

விவசாயிகள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால விவசாயக் கடனைப் பெறுவார்கள்.

மானிய வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடன் வழங்குவதற்காக அரசு வட்டி மானியத் திட்டத்தை (ISS) அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Embed widget