மேலும் அறிய

Budget 2024:வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்; சுவாரஸ்ய வரலாற்று தகவல்கள்!

Budget 2024: நாடாளுமன்ற பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றம் குறித்து வரலாற்று தகவல்களை இங்கே காணலாம்.

ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 23-ம் தேதி 2024-2025-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் முதலாவது மத்திய பட்ஜெட் இது. 

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக முழுநேர நிதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். ஆறு முறை நிதி அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனைச் சேரும். முன்னாள் பிரதமர் மோராஜி தேசாயின் சாதனை சமன் செய்தார். 18-வது மக்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த இடைக்கால பட்ஜெட் என்பதால் ஜூலை 23-ம் தேதி நடைபெறும் பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆறாவது முறையாக கணக்கில் கொள்ளப்ப்படுகிறது. 23-ம் தேதி காலை 11 மணிக்கு நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நேரம் முன்பு மாலை 5 மணியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் எப்படி மாறியது என்று காணலாம். 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் பட்ஜெட்  மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வசதியாக இருந்தது, ஏனெனில், இந்தியாவில் மாலை 5 மணி எனும்போது லண்டலின் ( GMT+ 5.30 மணி நேரம்) காலை 11.30 மணியாக இருக்கும். இதனாலேயே மாலை 5 மணிக்கு தாக்கல் செய்ய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், 1999 வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு 1999- இந்த நடைமுறையை மாற்றியது. சுதந்திரத்திற்கு பிறகும் லண்டல் நேர முறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; பட்ஜெட்டில் அறிவிப்புகள் குறித்து ஆரோக்கியமான கலந்தாலோசனை நடைபெற வேண்டும் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1999-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்த மாற்றத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 

போலவே, பிப்ரவரி மாதம் கடைசி நாளில்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. அதை முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாற்றினார். அதிலிரிந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கான (ஏப்ரல், 1) நேரம் இருப்பதால், திட்டங்களை அமல்படுத்த நேரம் இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

  • 1947-1955 வரை மத்திய பட்ஜெட் ஆங்கில மொழியில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது,. நாட்டின் மூன்றாவது நிதி அமைச்சரான சி.டி. தேத்முக் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நிதி அறிக்கை வெளியிட முடிவு செய்தார். இவர் நிதியமைச்சராவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநராக பொறுப்பி வகித்தார். 
  • 2017-ம் ஆண்டிற்கு முன்பு வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 
  • 1924- 2016-ம் ஆண்டுவரை ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் இரண்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது. 
  • 2021-ம் ஆண்டு முதல் காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Embed widget