மேலும் அறிய

Breaking News LIVE: ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா

Background

Bhogi Air Quality Chennai: போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

போகி பண்டிகை:

”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த தீயிலேயே தண்ணீரை காய்ச்சி, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, இறைவழிபாட்டிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால், இன்று முதலே பொங்கல் பண்டிகை கொண்டாட்டமானது தமிழ்நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.

காற்று மாசு:

ஆரம்பகாலங்களில் பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரித்தனர். இதோடு, கிராமப்புறங்களில் வயல்பகுதிகளில் கிடைக்கும், போகி முல்லை வெட்டி வந்து கொளுத்துவதும் உண்டு. அப்போது காற்று மாசு என்ற பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. ஆனால், நகரமயமாக்குதல் அதிகமானது பிறகு, போகிப் பண்டிகை கொண்டாட்டம் என்பதே பெரும் மாற்றம் கண்டுள்ளது. பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற கட்டாயத்தில் பலரும்,  டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்பட்டு, காற்று மாசு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்:

அந்த வகையில் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இன்று போகிப் பண்டிகைக்காக, அதிகாலை முதலே தங்கள் வீட்டின் வாசலில் தீமூட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதில் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை கண்ணார காணமுடிகிறது. அதிலிருந்து வெளியேறும் நுண்ணிய துகள்கள், கொட்டும் பனியில் கலந்து அப்படியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமடந்துள்ளது. வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் 200-ஐ கடந்து, சுவாசிக்கவே தகுதியற்றதாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சுவாசப் பிரச்னை கொண்டு இருப்பவர்கள் முடிந்தவரையில் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பது நல்லது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புகையில்லா போகியை கொண்டாடுவோம் என அரசு பலமுறை வலியுறுத்தியும், பொதுமக்கள் அதனை சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே சென்னை நிலவரம் காட்டுகிறது.

விமான சேவை பாதிப்பு:

விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் கடும் மனிமூட்டம் நிலவுகிறது. இதனால், சிங்கப்பூர், லண்டனில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல்  ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, மஸ்கட் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி உள்ளன. புகைமூட்டம் தொடர்ந்தால், விமானங்களை  பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, அந்தமான், புனே, மும்பை , டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத் மற்றும் மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால்,பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 

16:38 PM (IST)  •  14 Jan 2024

Breaking News LIVE: பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது சராமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி

பாரத் ஜோடோ நியாய் யாத்ரா தொடக்க நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் நாட்டில் பல்வேறு விஷ்யங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் சித்தாந்தங்களால் நாட்டை சிதைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது என குற்றாச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 

16:08 PM (IST)  •  14 Jan 2024

Breaking News LIVE: போகி எதிரொலி - வளசரவாக்கத்தில் காற்று அதிகப்படியாக மாசு

போகி காரணமாக வளசரவாக்கம் பகுதியில் அதிகபட்சமாக காற்று 270  தரக்குறியீடு அளவிற்கு மாசு அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

15:53 PM (IST)  •  14 Jan 2024

ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணைந்தார். இது மகாராஸ்ட்ரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

15:50 PM (IST)  •  14 Jan 2024

Breaking News LIVE: கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள ரயில்வே நிலையத்திற்கு ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

15:08 PM (IST)  •  14 Jan 2024

சத்தீஸ்கரில் லேசான நில அதிர்வு! மக்கள் பீதி!

சத்தீஸ்கரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபரKanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
PM Modi Song: பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
Embed widget