Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் குமட்டலை வரவழைக்கிறது என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நீட் முறைகேடு தொடர்பாக டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டத்தை நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவை அலற வைத்த போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நாடு முழுவதும் பரவியது. இளம் தலைமுறையினர் தொடங்கி பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் போன்றவை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியது. போராட்டத்தின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்றும் என பிரதமர் மோடி உறுதியளிக்கும் வரை சென்றது. மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசு பணிந்தது மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல் நிகழ்ந்தது. கடந்த வாரம் முழுக்க டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியே கலவரப்பூமியாக மாறியிருந்தது.
காட்டமாக விமர்சித்த கங்கனா ரணாவத்
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “போராட்டக்காரர்களின் வீடியோக்களைப் பார்க்கும்போது அவை யாவும் வாந்தி வரவழைப்பவையாக உள்ளது. இந்த போராட்டக்காரர்கள் அழுக்கு, குப்பை மற்றும் அசிங்கத்தைப் பரப்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த போராட்ட வீடியோக்களைப் பார்த்து தான் மிகவும் சோர்வடைந்து விட்டேன் எனவும், தனக்கு ஒரு ஓய்வு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் குமட்டலை வரவழைக்கிறது. அவர்கள் பேசும் விதமும், பயன்படுத்தும் மொழியும் என் வாழ்நாளில் மக்கள் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரிகமாகவும் இருப்பதை கண்டதில்லை என காட்டமாக பேசியுள்ளார்.
Also Read: விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
இவர்களையெல்லாம் எல்லாம் பெற்றெடுத்து வளர்ப்பது யார்?.. இந்திய நாடு என்பது பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய, பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஓர் இடம். ஆனால் நீங்கள் உங்களை கரப்பான் பூச்சிகள் என அழைத்துக் கொள்வதோடு அவற்றைப் போலவே நடந்துக் கொள்கிறீர்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் பங்கேற்ற இந்து பெண்களை சாடிய கங்கனா, நான் அவர்களை சாக்கடைத் தலைமுறை என்று அழைக்கிறேன். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதில்லை. மிகவும் அசிங்கமானவர்களாகவும் ஊழல் நிறைந்தவர்களாகவும் இருப்பதால், இத்தகைய பெண்களால் ஒரு சிறந்த இல்லத்தரசிகளாகக் கூட இருக்க முடியாது” என மோசமான கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















