மேலும் அறிய

"என்ன விட்டுடுங்க சார்" கதறிய மனநல பாதிக்கப்பட்டவர்.. மனசாட்சியே இல்லாமல் தாக்கிய போலீஸ்!

பீகாரில் மனநல பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடுரோட்டில் நடந்துள்ளது. மனநல பாதிக்கப்பட்டவரை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

பீகாரில் மனநல பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, சாலையில் போட்டு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், மனநல பாதிக்கப்பட்டவரை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, மக்களை காக்க வேண்டிய இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களை அச்சத்தில் ஆழத்தி வருகிறது.

இந்த நிலையில், பீகாரில் நடந்த சம்பவம் ஒன்று நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. கதிஹார் நகரில் மனநல பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, சாலையில் போட்டு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

ஊர்க்காவல்படையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் சேர்ந்து, சாலையில் அமர்ந்துள்ள மனநல பாதிக்கப்பட்டவரை தங்களின் தடியை கொண்டு தாக்குகின்றனர். இதனை அருகில் இருக்கும் ஒருவர் வீடியோவாக எடுக்கிறார்.

போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் பின்னர் இறங்கி, அதிகாரிகளில் ஒருவரிடமிருந்து தடியை வாங்கி, மனநல பாதிக்கப்பட்டவரின் கால்களில் மீண்டும் அடிக்கத் தொடங்குகிறார். தன்னை விட்டுவிடும்படி மனநல பாதிக்கப்பட்டவர் கெஞ்சுகிறார்.

ஆனால், போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் அதை கேட்காமல், அவரை மீண்டும் தாக்குகிறார். மற்ற அதிகாரியின் உதவியுடன் அவரை வாகனத்தின் பின்புறத்திற்கு இழுத்துச் செல்கிறார். இந்த சம்பவம் கதிஹாரின் சமேலியின் சோஹர் கிராம பஞ்சாயத்து பகுதியில் நடந்தது.

பாதிக்கப்பட்டவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எந்த காரணமும் இல்லாமல் அதிகாரிகள் தாக்கியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். போதியா காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் கேதார் பிரசாத் யாதவ் மற்றும் கான்ஸ்டபிள் பிரீத்தி குமாரி, ஊர்க்காவல் படையினர் சிக்கந்தர் ராய் மற்றும் கிஷோர் மஹதோ, ஓட்டுநர் பம்பம் குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கதிஹார் காவல் கண்காணிப்பாளர் (SP) வைபவ் சர்மா தெரிவித்துள்ளார்.

பிரசாத் யாதவ் மற்றும் பிரீத்தி குமாரி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ராய் மற்றும் மஹதோவை ஒரு வருடம் பணியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஊர்க்காவல் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் பம்பம் குமார் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget