மேலும் அறிய

இரவில் சாலையில் நடந்து சென்றதற்கு அபராதமா? ட்விட்டரில் கொந்தளித்த தம்பதி...நடந்தது என்ன? 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல்துறை அதிகாரி ஒருவர் தம்பதியை தொந்தரவு செய்து அவர்களிடம் கட்டாயப்படுத்தி அபராதத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

பிறந்தநாள் நிகழ்வில் இருந்து தம்பதியினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலர் மற்றும் தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட அந்த நபர், பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடமிருந்து உதவி கோரியுள்ளார். "முந்தைய நாள் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நள்ளிரவு 12.30 மணி இருக்கும்.

நானும் என் மனைவியும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம் (நாங்கள் மன்யாதா டெக் பூங்காவிற்குப் பின்னால் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கிறோம்).

நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் ரோந்து வேன் ஒன்று எங்களுக்கு அருகில் வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினார்கள். நாங்கள் திகைத்துப் போனோம்.

எங்களுடைய ஆதார் அட்டைகளை போலீஸாரிடம் காட்டினேன். அதன் பிறகு அவர்கள் எங்கள் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து தனிப்பட்ட விவரங்களைக் கேட்டனர்.

சற்று அதிர்ந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கு பணிவாக பதிலளித்தோம். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்ததை எடுத்து எங்களின் பெயர்களையும் ஆதார் எண்களையும் பதிவு செய்ய ஆரம்பித்தார். சிக்கலை உணர்ந்து, எங்களுக்கு ஏன் சலான் வழங்கப்படுகிறது என்று கேட்டோம்.

இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் சுற்றித் திரிவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அப்படியொரு விதி இருப்பதாக நம்பமுடியவில்லை என்றாலும், இரவு நேரமாகிவிட்டதாலும், எங்களது தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாலும், நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என பதிவிட்டுள்ளார்.

சாதாரண நாளில் தெருவில் நடந்து சென்ற வயது வந்த தம்பதிகளை ஏன் அடையாள அட்டையைக் காட்டச் சொல்ல வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுரக்ஷா செயலி மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112 மூலம் புகார் அளித்துள்ளேன். தன்னுடைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Property Tax: உங்க பெயரில் சொத்து வரி இருக்கான்னு தெரியுமா? தமிழ்நாட்டில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Property Tax: உங்க பெயரில் சொத்து வரி இருக்கான்னு தெரியுமா? தமிழ்நாட்டில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Sri Reddy : பிடிக்காத போதும் கவர்ச்சி காட்டுகிறேன்.. நயன்தாரா, த்ரிஷாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி
Sri Reddy : பிடிக்காத போதும் கவர்ச்சி காட்டுகிறேன்.. நயன்தாரா, த்ரிஷாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி
தில்லாலங்கடி பெண் செய்த வேலை.. போலியை வைத்து ஒரிஜினலை தூக்கிக்கொண்டு ஓட்டம் - பாபநாசத்தில் பரபரப்பு
தில்லாலங்கடி பெண் செய்த வேலை.. போலியை வைத்து ஒரிஜினலை தூக்கிக்கொண்டு ஓட்டம் - பாபநாசத்தில் பரபரப்பு
Embed widget