மேலும் அறிய

இரவில் சாலையில் நடந்து சென்றதற்கு அபராதமா? ட்விட்டரில் கொந்தளித்த தம்பதி...நடந்தது என்ன? 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல்துறை அதிகாரி ஒருவர் தம்பதியை தொந்தரவு செய்து அவர்களிடம் கட்டாயப்படுத்தி அபராதத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

பிறந்தநாள் நிகழ்வில் இருந்து தம்பதியினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலர் மற்றும் தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட அந்த நபர், பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடமிருந்து உதவி கோரியுள்ளார். "முந்தைய நாள் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நள்ளிரவு 12.30 மணி இருக்கும்.

நானும் என் மனைவியும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம் (நாங்கள் மன்யாதா டெக் பூங்காவிற்குப் பின்னால் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கிறோம்).

நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் ரோந்து வேன் ஒன்று எங்களுக்கு அருகில் வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினார்கள். நாங்கள் திகைத்துப் போனோம்.

எங்களுடைய ஆதார் அட்டைகளை போலீஸாரிடம் காட்டினேன். அதன் பிறகு அவர்கள் எங்கள் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து தனிப்பட்ட விவரங்களைக் கேட்டனர்.

சற்று அதிர்ந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கு பணிவாக பதிலளித்தோம். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்ததை எடுத்து எங்களின் பெயர்களையும் ஆதார் எண்களையும் பதிவு செய்ய ஆரம்பித்தார். சிக்கலை உணர்ந்து, எங்களுக்கு ஏன் சலான் வழங்கப்படுகிறது என்று கேட்டோம்.

இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் சுற்றித் திரிவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அப்படியொரு விதி இருப்பதாக நம்பமுடியவில்லை என்றாலும், இரவு நேரமாகிவிட்டதாலும், எங்களது தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாலும், நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என பதிவிட்டுள்ளார்.

சாதாரண நாளில் தெருவில் நடந்து சென்ற வயது வந்த தம்பதிகளை ஏன் அடையாள அட்டையைக் காட்டச் சொல்ல வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுரக்ஷா செயலி மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112 மூலம் புகார் அளித்துள்ளேன். தன்னுடைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget