மேலும் அறிய

இரவில் சாலையில் நடந்து சென்றதற்கு அபராதமா? ட்விட்டரில் கொந்தளித்த தம்பதி...நடந்தது என்ன? 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல்துறை அதிகாரி ஒருவர் தம்பதியை தொந்தரவு செய்து அவர்களிடம் கட்டாயப்படுத்தி அபராதத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

பிறந்தநாள் நிகழ்வில் இருந்து தம்பதியினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலர் மற்றும் தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட அந்த நபர், பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடமிருந்து உதவி கோரியுள்ளார். "முந்தைய நாள் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நள்ளிரவு 12.30 மணி இருக்கும்.

நானும் என் மனைவியும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம் (நாங்கள் மன்யாதா டெக் பூங்காவிற்குப் பின்னால் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கிறோம்).

நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் ரோந்து வேன் ஒன்று எங்களுக்கு அருகில் வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினார்கள். நாங்கள் திகைத்துப் போனோம்.

எங்களுடைய ஆதார் அட்டைகளை போலீஸாரிடம் காட்டினேன். அதன் பிறகு அவர்கள் எங்கள் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து தனிப்பட்ட விவரங்களைக் கேட்டனர்.

சற்று அதிர்ந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கு பணிவாக பதிலளித்தோம். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்ததை எடுத்து எங்களின் பெயர்களையும் ஆதார் எண்களையும் பதிவு செய்ய ஆரம்பித்தார். சிக்கலை உணர்ந்து, எங்களுக்கு ஏன் சலான் வழங்கப்படுகிறது என்று கேட்டோம்.

இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் சுற்றித் திரிவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அப்படியொரு விதி இருப்பதாக நம்பமுடியவில்லை என்றாலும், இரவு நேரமாகிவிட்டதாலும், எங்களது தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாலும், நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என பதிவிட்டுள்ளார்.

சாதாரண நாளில் தெருவில் நடந்து சென்ற வயது வந்த தம்பதிகளை ஏன் அடையாள அட்டையைக் காட்டச் சொல்ல வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுரக்ஷா செயலி மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112 மூலம் புகார் அளித்துள்ளேன். தன்னுடைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget