மேலும் அறிய

Court On Marital Relationship : திருமண இணையுடன் பாலியல் உறவு கொள்ளாமல் இருந்தால் குற்றமா? உயர்நீதிமன்றம் அதிரடி..

"தகுந்த காரணம் இன்றி கணவனையோ மனைவியையோ நீண்ட காலத்திற்கு பாலியல் உறவு கொள்ள அனுமதிக்காமல் வைத்திருப்பது இணையருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்"

மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது, நீண்ட காலத்திற்கு தனியாக விட்டு சென்றது ஆகியவற்றின் அடிப்படையில் கணவர் ஒருவர் விவாகரத்து கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தகுந்த காரணம் இன்றி கணவனையோ மனைவியையோ நீண்ட காலத்திற்கு பாலியல் உறவு கொள்ள அனுமதிக்காமல் வைத்திருப்பது இணையருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்" என தெரிவித்தனர்.

"பாலியல் உறவு கொள்ள அனுமதிக்காமல் வைத்திருப்பது இணையருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்"

முதலில், குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், குடும்ப நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, "கணவர் அசல் ஆவணங்களுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆவணங்களின் நகல்களை சமர்ப்பித்தார்" என கூறி, இந்து திருமண சட்டம், 1955இன் கீழ், விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார். 

இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது, நீண்ட காலத்திற்கு தனியாக விட்டு சென்றது ஆகியவற்றின் அடிப்படையில் கணவர் விவாகரத்து கேட்டிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "இருவரும், 1979ஆம் ஆண்டு, மே மாதம் திருமணம் செய்து கொண்டோம். 

விவாகரத்து வழக்கு:

சிறிது காலத்திற்குப் பிறகு, எனது மனைவியின் நடத்தை மாறியது. மேலும், என்னுடன் மனைவியாக வாழ அவர் மறுத்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அவர் என்னுடன் எந்த உறவையும் ஏற்படுத்தவில்லை. சிறிது காலமே என்னுடன் வாழ்ந்து வந்தார். ​​இறுதியில், அவர் பெற்றோரின் வீட்டில் தனியாக வாழத் தொடங்கினார்.

திருமணமான முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு, தனது வீட்டிற்கு திரும்பும்படியும், திருமண கடமையை நிறைவேற்றவும், திருமண பந்தத்தை மதிக்கும்படியும் மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் மறுத்துவிட்டார்.

கடந்த 1994ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சமூக விதிகளின்படி, கணவர் பஞ்சாயத்து கூட்டத்தை நாடினார். மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக ₹22,000 செலுத்திய பின்னர் தம்பதியினர் விவாகரத்து ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கணவர் விவாகரத்து கோர முயன்றபோது, ​​அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் சுனீத் குமார் மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.

அப்போது பேசிய நீதிபதிகள், "நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவரின் கூற்றுப்படி, அவர்களுக்கிடையேயான திருமண பந்தத்தை மனைவி மதிக்கவில்லை. இதனால் அவர்களின் திருமண உறவில் முறிவு ஏற்பட்டது.

இணையருடன் கட்டாயப்படுத்தி வாழ்க்கையை தொடர வைப்பது ஏற்று கொள்ள முடியாது. திருமண உறவில் இரு தரப்பையும் நிரந்தரமாக சேர்த்து வைப்பதற்காக அட்வைஸ் கொடுப்பதை விட அதை ரத்து செய்துவிடலாம்" என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Embed widget