மேலும் அறிய

"சுய சார்பு இந்தியாவை படைக்க இது உந்து சக்தி": ஐஎன்எஸ் விக்ராந்த் அர்ப்பணிப்பு விழாவில் மோடி!

இந்த நிகழ்வு, உலக நாடுகளிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும். ஐஎன்எஸ் விக்ராந்த் சாதாரண போர்க்கப்பல் அல்ல, ராட்சத உருவம் கொண்டது, மிகவும் தனித்துவமானது, சிறப்பு மிக்கது.

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசுக்கு உந்து சக்தியாக விளங்கி, எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஐ என் எஸ் விக்ராந்த் அறிமுக விழா

கேளர மாநிலம் கொச்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் விழாவில், இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தை  நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் MiG-29K போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும் என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில், MiG போர் விமானங்களும் சில ஹெலிகாப்டர்களும் ஐஎன்எஸ் விக்ராந்தில் நிலைநிறுத்தப்படும். போயிங் மற்றும் டஸ்ஸால்ட் விமானங்கள், 26 போர் கப்பல் தள அடிப்படையிலான விமானங்களை வாங்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. 

கடற்படைக்கு புதிய கோடி

இந்த விழாவில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதில் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் நீக்கப்பட்டு காலனியத்துவத்திற்கு எதிரான கோடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர்கல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் பேசிய பிரதமர் மோடி இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற, சுய சார்பு இந்தியாவுக்கு இது உந்து சக்தியா விளங்கி, எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்: வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்

மோடி பேச்சு

அதில் பேசிய மோடி, "இன்று, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இந்த கேரள கடற்கரையில், புதிய சூரிய உதயத்தை பார்க்கிறார்கள். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வு, உலக நாடுகளிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும். ஐஎன்எஸ் விக்ராந்த் சாதாரண போர்க்கப்பல் அல்ல, ராட்சத உருவம் கொண்டது, மிகவும் தனித்துவமானது, சிறப்பு மிக்கது. இந்த போர்க்கப்பல் நம்மிடையே கடின உழைப்பையும், அறிவையும், 21ம் நூற்றாண்டுக்கு இந்தியா செய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது", என்றார்.

இந்தியாவின் பெருமிதம்

மேலும் பேசிய அவர், "இந்த போர்க்கப்பலின் இலக்குகள் வேகமாக இருக்கும், நீண்ட பயணம் மேற்கொள்ள முடியும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும். சுதந்திர இந்தியாவின் ஒப்பற்ற படைப்பு இந்த விக்ராந்த். உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று முதல் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிற்கு இதன்மூலம் புதிய நம்பிக்கையை கிடைத்துள்ளது. இது உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு சக்தியால் மிகவும் வலிமையுடன் உருவாகி உள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜா, தன்னுடைய படைத்திறனைப்பயன்படுத்தி கப்பற்படையை உருவாக்கி எதிரிகளை தூங்காவிடாமல் செய்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கப்பல்களின் வலிமையைப் பயன்படுத்தி, மிரட்டி வர்த்தகம் செய்தனர். இந்தியாவின் கடல்சார் வலிமையை உடைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். எனவே இது ஒரு மிகப்பெரிய மைல் கல்", என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget