மேலும் அறிய

வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்

தனது மகனை சிகிச்சைக்காக அழைத்துவர அரசு மருத்துவரோ வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்ததால் தாமதமாக வர வாழ வேண்டிய பிஞ்சு மலர் 5 வயதிலேயே சருகானது.

தனது மகனை சிகிச்சைக்காக அழைத்துவர அரசு மருத்துவரோ வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்ததால் தாமதமாக வர வாழ வேண்டிய பிஞ்சு மலர் 5 வயதிலேயே சருகானது. மருத்துவ அலட்சியத்தால் தான் இது நடந்தது என்று உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் பார்கி நகரின் தின்ஹடா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பாண்டே. இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது 5 வயது மகனை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதாரா நிலையத்திற்கு அழைத்து வந்தார். சிறுவனுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. சிறுவனுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவர் லோகேஷ் குமார் அங்கு வரவில்லை. பல மணி நேரம் காத்திருப்புக்குப் பின் செவிலி கொடுத்த தகவல் மருத்துவர் பிஸியாக இருக்கிறார் என்பதே.

இந்நிலையில் அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். மருத்துவ வேலை நேரத்தில் மருத்துவர் அங்கில்லாமல் எங்கு சென்றார் என்று ஆவேசமடைந்தனர். ஆனால் மருத்துவர் லோகேஷ் குமாரோ வீட்டில் மனைவி நேர்த்திக்கடன் செய்யும் சிறப்புப் பூஜைக்காக காத்திருந்துள்ளார். இந்த தகவல் தெரியவரவே ஊரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ம.பி. முன்னாள் முதல்வர் கமல் நாத், பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றஞ்சாட்டினார். அந்தச் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் பரவ மருத்துவர் லோகேஷ் குமார் மீது மக்கள் வசை பாடி வருகின்றனர். சிறுவனின் உயிரைக் கூட காப்பாற்ற முடியாது அரசில் சுகாதார அமைச்சர் எதற்கு அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காயத்திற்கு காண்டம்:
கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை சமாளிப்பது எப்படி என்பதற்கு இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
ஹீல் இன் இந்தியா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து இந்தியாவை மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறது. 

இதே வேளையில் தான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சிகரமான சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவார் ரேஷ்மா பாய். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் சமுதாய மருத்துவநலக் கூடத்திற்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்லுமாறு சொல்லியுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரேஷ்மா பாயின் தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget