மேலும் அறிய

Crime : பட்டாசுகள் வெடிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்...! போலீஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு..! என்ன நடந்தது..?

குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. வட இந்திய மாநிலமான குஜராத்தின் வதோதரா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் பனிகேட் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் வாகனங்கள் சேமடைந்தன. வாகனங்கள் சூறையாடப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீதும் பெட்ரோல் குண்டை மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீசி எறிந்தனர். எனினும், இதில் யாரும் காயம் அடையவில்லை. அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டாசு பறந்து வந்து விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல் துறை துணை ஆணையர் யஷ்பால் ஜகாங்கியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பனிகேட் பகுதியில் உள்ள முஸ்லிம் மெடிக்கல் சென்டர் அருகே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. நிலைமை தற்போத கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். மோதல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார் யஷ்பால் ஜகாங்கியா.

"நிலைமை சீராக இருக்கிறது, சந்தை வழக்கம் போல் இயங்கியது. பட்டாசு வெடிப்பதில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது" என்று அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த ஊரான ஜோத்பூரில் இந்த ஆண்டு மே மாதம் ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது. இதனால் நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி ஊரடங்கு உத்தரவை விதிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் மதக் கொடிகளை வைப்பதில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது கல் வீச்சுக்கு வழிவகுத்தது. இதில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜோத்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன் மொபைல் இணையச் சேவைகளை நிறுத்தியது.

ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரம்ஜான் அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து, நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget