மேலும் அறிய

Crime : பட்டாசுகள் வெடிப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்...! போலீஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு..! என்ன நடந்தது..?

குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. வட இந்திய மாநிலமான குஜராத்தின் வதோதரா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் பனிகேட் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் வாகனங்கள் சேமடைந்தன. வாகனங்கள் சூறையாடப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீதும் பெட்ரோல் குண்டை மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீசி எறிந்தனர். எனினும், இதில் யாரும் காயம் அடையவில்லை. அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டாசு பறந்து வந்து விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல் துறை துணை ஆணையர் யஷ்பால் ஜகாங்கியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பனிகேட் பகுதியில் உள்ள முஸ்லிம் மெடிக்கல் சென்டர் அருகே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. நிலைமை தற்போத கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். மோதல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார் யஷ்பால் ஜகாங்கியா.

"நிலைமை சீராக இருக்கிறது, சந்தை வழக்கம் போல் இயங்கியது. பட்டாசு வெடிப்பதில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது" என்று அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த ஊரான ஜோத்பூரில் இந்த ஆண்டு மே மாதம் ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது. இதனால் நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி ஊரடங்கு உத்தரவை விதிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் மதக் கொடிகளை வைப்பதில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது கல் வீச்சுக்கு வழிவகுத்தது. இதில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜோத்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன் மொபைல் இணையச் சேவைகளை நிறுத்தியது.

ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரம்ஜான் அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து, நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget