மேலும் அறிய

வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி

''தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதை தொடர்ந்து உள்ள பெண்குழந்தைக்கு முருக வள்ளி என பெயர் வைத்தார்''

தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் 50 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் கடந்த 20 ஆண்டு காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது மாற்றப்பட்ட இச்சமுதாயத்தினர் தற்போது புதியபேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடு அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

                                             வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ரவிகுமார் நரிக்குறவர்களுக்கு வசவப்புரம் கிராமத்திற்கு உட்பட்ட அனவரதநல்லூர் அருகே பரம்புவில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 18 குடும்பத்தினருக்கு முதற்கட்டமான வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதனை அடுத்து நரிக்குறவர்களுக்கு விரைவில் பசுமை வீடுகள் அல்லது இந்திரா காந்தி நினைவு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். முதலில் நரிக்குறவர்கள் அப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து இருந்தால் மட்டுமே இருப்பிட சான்று உள்ளிட்டவைகள் வழங்கமுடியும் என தெரிவித்து இருந்தார்.

                                   வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
இதனையடுத்து நரிக்குறவர்கள் அப்பகுதிக்கு சென்று தற்காலிக கூடாரம் அமைக்க முற்பட்டபோது முற்றிலும் பரம்பு பகுதியாக இருந்ததால் கூடாரம் அமைக்க இயலவில்லை தங்களுக்கு பரம்பு பகுதியை சீரமைத்துதரவும் குடியிருப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் பரம்பு பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையை அடுத்து மீண்டும் புதிய பேருந்து நிலையம் அருகே தங்களது கூடாரங்களை அமைத்து வாழ்வாதாரத்தை துவங்கினர். மழையோ பனியோ புயலோ தங்களது குழந்தை குட்டிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்டவைகளை விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டனர்.
                                   வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
ற்போது புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் இவர்களுக்கு தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக கூடாரத்திற்குள் இருக்க முடியவில்லை இதனால் பேருந்து நிலையத்தில் படுக்க வேண்டிய சூழல் உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் மற்றும் அமைச்சரை சந்தித்து கோரிக்கை அளித்து இருந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

      
                           வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
இதனை தொடர்ந்து அவர்கள் அணிவித்த பாசிமாலையை அன்புடன் ஏற்றுகொண்ட அவர், அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்டவைகள் உடனே வழங்கவும், தூத்துக்குடி அருகில் விரைவில் நிலம் வழங்கி பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவருக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.

                                   வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
இது தொடர்பாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாவீரன் நம்மிடம் கூறும்போது, 30 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் எவ்வித அடையாளமும் இல்லாமல்  வசிப்பதாக கூறுகின்றனர். மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும்போது பல்வேறு இன்னல்களை அளிப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை போடுவதாக அதிகாரிகள் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் தங்களது குறைகளை தெரிவித்து உள்ளதாகவும் , தற்போது மாவட்ட நிர்வாகம் ஆதார் அட்டை எடுக்க சொல்லி உள்ளதாகவும் நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

                                   வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் கூறும்போது, மாலை கோர்த்து விற்கும் எங்களுக்கு கடைகளுக்கு சென்று விற்க தெரியாது, பஸ் ஸாண்டாடில் உக்கார்ந்து விற்போம் அது தான் எங்களது வாழ்வாதாரம் என்கிறார். இதனை தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அவர்களது வாழ்வாதாராம் பாதிக்காத வகையில் தூத்துக்குடியில் இருந்து பத்து பதினைந்து நிமிட பேருந்து பயணம் செய்து வரக்கூடிய பகுதியில் உரிய நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

                                   வீடுகளின்றி தவித்த நரிக்குறவர்களுக்கு விரைவில் வீடு - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதி
 
தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதை தொடர்ந்து உள்ள பெண்குழந்தைக்கு முருக வள்ளி என பெயர் வைத்தார். நரிக்குறவர் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்  தங்களின் கோரிக்கையை கேட்டு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Embed widget