மேலும் அறிய

ஓசூர் மக்களே இனி ஈசியா ஏசில பெங்களூரு போலாம் - அது எப்படி தெரியுமா..?

ஓசூர் - பெங்களூரு செல்லும் இந்தப் பாதையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

ஓசூர் முதல் பொம்ம சந்திரா வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. 


ஓசூர் மக்களே இனி ஈசியா ஏசில பெங்களூரு போலாம் - அது எப்படி தெரியுமா..?

மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறு தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இந்த அறிக்கையை இறுதி செய்யும் நடவடிக்கையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் நேற்று முன்தினம் பெங்களூரு சென்றார். அவர் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வர் ராவை சந்தித்து பேசினார்.

ஓசூர் - பொம்மசந்திரா வரை மெட்ரோ பாதை
 
அப்போது ஓசூர் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இயக்குனர் அர்ச்சுனன் தலைமை பொது மேலாளர் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு லிவிங் ஸ்டோன் எலியாசர், பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் ரெட்டி மற்றும் சென்னை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனக் குழுவினர்

தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன குழுவினர் ஆலோசகர் ஓசூரில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். 

அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஓசூர் உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது;- 

ஓசூர் - பெங்களூரு செல்லும் இந்தப் பாதையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இன்றைய கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன. 

12 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை அமைக்க வாய்ப்பு

இந்தப் பாதையை பன்னிரெண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒரு பணிமனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இன்றைய கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் கூறினர். 

இத்திட்டத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாவட்ட ஆட்சியர் சரயு கூறியதாவது:-

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒசூர் - பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படும். இந்த போக்குவரத்து இணைப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தினால் குறித்த நேரத்தில் குறித்து இடத்திற்கு உடனடியாக செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு கூறினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Embed widget