மேலும் அறிய

தருமபுரி அருகே காணாமல் போனவர் 78 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சடலமாக மீட்பு

தருமபுரி அருகே காணாமல் போனவர் 78 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சடலமாக மீட்பு. காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால், இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியல்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கோவிந்தசாமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த டைலர் கோவிந்தசாமி என்பவருக்கும் கோவிந்தசாமிக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கோவிந்தசாமியின் மூத்த மகன் முத்துலிங்கம் டைலர் கோவிந்தசாமியிடம் பணம் வாங்கியதாக கூறி, தகராறு செய்துள்ளார். அப்போது கோவிந்தசாமி இடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, தொடர்ந்து மீண்டும் பணம் வேண்டும் என கேட்டு, கம்பைநல்லூர் காவல் துறையை வைத்து, கோவிந்தசாமியை மிரட்டி செருப்பால் அடித்ததாக  கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கோவிந்தசாமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

கடந்த 78 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காணமல் போன  நிலையில் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு குடும்பத்தினர், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து புகார் அளித்தவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து கோவிந்தசாமி உறவினர்கள், நீதிமன்றத்தில் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்துள்ளனர். அப்பொழுது காவல் துறையினர், கோவிந்தசாமியின் ஊர்க்காரர்களே கடத்தி வைத்துக் கொண்டு புகார் தெரிவிப்பதாக பதில் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றம் கோவிந்தசாமியின் உறவினர்களை கண்டித்து அனுப்பி உள்ளது. இதற்கிடையில் காணாமல் போன கோவிந்தசாமி பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் வனப் பகுதிக்குட்பட்ட ஒட்டுபட்டி காப்பு காட்டில் பல நாட்களுக்கு முன் இறந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு  காவல் துறையின் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து உறவினர்கள்  உடலை அடையாளம் கண்டு கோவிந்தசாமியின் உடல் தான் என சொன்ன பிறகு பென்னாகரம் மருத்துவமணையில் இன்று  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடலை வாங்கிக் கொண்டு வந்த உறவினர்கள்  கோவிந்தசாமியின் இறப்புக்கு காரணமான டைலர் கோவிந்தசாமியை கைது செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும், கம்பைநல்லூர்-காரிமங்கலம்  சாலையில் உள்ள கோணம்பட்டி பிரிவு சாலையில்  வைத்து 200 மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அரசு பேருந்துகள், தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை  நீண்ட நேரம் காத்திருந்தன. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், காரிமங்கலம் தாசில்தார் மற்றும் கம்பைநல்லூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். 

இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget