மேலும் அறிய

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் ‘வக்கீல்னு சொல்லி எங்களையும் ஏமாத்திட்டாங்க’

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் வழக்கறிஞர் எனக் கூறி ரூ.36 லட்சம் மோசடி.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளர் வழக்கறிஞர் எனக் கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல் வழக்கில் கைதான சிவராமன் ‘வக்கீல்னு சொல்லி எங்களையும் ஏமாத்திட்டாங்க’
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவேரிப்பட்டினம் காந்தி நகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவராமன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி. அவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உட்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிவராமன் தன்னை வழக்கறிஞர் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். 

வழக்கறிஞர் என சொல்லி ரூ.36 லட்சத்து 20 ஆயிரம் ஏமாற்றிய சிவராமன்

கிருஷ்ணகிரி அடுத்த கொண்டை பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், மோகன், சாந்தி, நாராயணன், மஞ்சுளா, கோவிந்தசாமி மற்றும் சந்திரா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெத்தால பள்ளி கிராமத்தில் எங்களுக்கு பாதிக்கப்பட்ட சொத்தை வேறு ஒருவர் போலியாக கிரயம் பத்திரம் தயார் செய்து சுவாதீனத்தில் வைத்துள்ளார். அந்த சொத்தை மீட்டு தருவதாகவும் தான் ஒரு வழக்கறிஞர் எனவும் சிவராமன் எங்களிடம் அறிமுகமானார் பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு என போலியான நீதிமன்ற ஆணையை எங்களிடம் காண்பித்து நீதிமன்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

அதன்படி சக்திவேலிடம் 4,25,000, மோகன் என்பவரிடம் 4,25,000, சாந்தி என்பவரிடம் 8,50,000, நாராயணன் என்பவரிடம் 8,50,000, கோவிந்தசாமி என்பவரிடம் 8,50,000 மற்றும் வழக்கறிஞர் கட்டணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 36 லட்சத்து 20 ஆயிரம் சிவராமன்  போலியான வங்கி ரசிதையும் எங்களிடம் காண்பித்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தில் சிவராமன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும் போலியாக தன்னை வழக்கறிஞர் என காட்டிக்கொண்டதும் எங்களுக்கு தெரியவந்தது.

ஆகவே வழக்கறிஞர் எனக் கூறிய எங்களை ஏமாற்றிய சிவராமன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணம் 36 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்கிய சில்ட் மெடல்கள் 


சமாதானம் செய்ய முயன்ற பள்ளி முதல்வர் 

போலி என்சிசி பயிற்சியாளர் சிவராம  கடந்த எட்டாம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி முதலில் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடன் இருக்கும் சக மாணவிகளிடம் கூறினார். 

பின்னர் அந்த மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி முதல்வர் சதீஷ்குமார் இடம் நடந்த சம்பவத்தை கூறினார். அவர் இந்த விஷயத்தை பெரிது படுத்தாதீங்க வீட்டில் யாருக்கும் சொல்லாதீங்க பெற்றோர் கஷ்டப்படுவாங்க எனக் கூறியுள்ளார். 

அதன் பிறகு ஆடிட்டோரியத்தில் பரிசளிப்பு விழா நடத்து உள்ளது. அந்த விழாவில் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கேடயங்கள், மெடல்கள் கொடுத்து மீண்டும் அந்த விஷயத்தை பெரிது படுத்தாதீங்க எனக் கூறியுள்ளார். மாணவியை சமாதானப்படுத்திய முதல்வர் மேற்கண்ட முயற்சி பற்றி போலீசாரின் விசாரணையில் தெரிந்துள்ளது. 

மண்டல என்சிசி அலுவலர் என ஏமாற்றிய சக்திவேல் 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டி சேர்ந்தவர் சக்திவேல் 39 என்பவர் கைதாகி உள்ளார். சிவராமன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு என்சிசி மண்டல மேலாளராக சென்றுள்ளார். அவர் தன்னை சேலம் மண்டல தேசிய மாணவர் படை பிரிவு அலுவலர் எனக் கூறி ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக்திவேல் காரிமங்கலம் ஒன்றிய நாம் தமிழ ர் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார் இந்த சம்பவத்திற்கு பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Embed widget