மேலும் அறிய

கோவையை கொந்தளிக்க வைத்த ‛மே’ கொரோனா; ஓராண்டை ஓவர்டேக் செய்த ஒரு மாத பாதிப்பு!

கோவையில் மே மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகம் என்பது தான் அதிர்ச்சியானது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பரவத் துவங்கியுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் கொரோனா தொற்று தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன்படி நேற்று ஒரே நாளில் 3,488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 70 ஆயிரத்து 158 பேராக அதிகரித்த்துள்ளது. நேற்று 39 பேர் உயிரிழந்ததால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1275 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கையை விட தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. நேற்று 3308 பேர் குணமடைந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் 39 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையை கொந்தளிக்க வைத்த ‛மே’ கொரோனா; ஓராண்டை ஓவர்டேக் செய்த ஒரு மாத பாதிப்பு!

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 993 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் சதவீதம் 56.42 சதவீதமாக உள்ளது. சூலூர் பகுதி 8.52 சதவீதம், துடியலூர் பகுதி 7.45 சதவீதம், மதுக்கரை 5.20 சதவீதம், தொண்டாமுத்தூர் பகுதி 4.57 சதவீதமாக உள்ளது. நகரப்பகுதிகளை காட்டிலும், புறநகர் பகுதிகளில் தொற்று பாதிப்பு சதவீதம் குறைவாக இருந்து வருகிறது.

மே ஒன்றாம் தேதி நிலவரப்படி கோவை மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 79 ஆயிரத்து 592 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 158 பேராக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் மட்டும் மாதத்தில் 90 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட, மே மாதத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். இதேபோல மே ஒன்றாம் தேதி 723 ஆக இருந்த உயிரிழப்பு, நேற்று 1275 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 552 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையை கொந்தளிக்க வைத்த ‛மே’ கொரோனா; ஓராண்டை ஓவர்டேக் செய்த ஒரு மாத பாதிப்பு!

தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த கோவையின் கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த சில நாட்களாக குறையத் துவங்கியுள்ளன. கடந்த 25 ம் தேதி 3632 ஆக இருந்த தினசரி பாதிப்பு, 26 ம் தேதி 4268 ஆக உயர்ந்தது. 27 ம் தேதி இதுவரை இல்லாத வகையில் உச்ச பாதிப்பாக 4734 ஆக பதிவானது. அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது. 28 ம் தேதி 3992 ஆகவும், 29 ம் தேதி 3692 ஆகவும், 30 ம் தேதி 3537 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும் தினசரி தொற்றுப் பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

கோவையை கொந்தளிக்க வைத்த ‛மே’ கொரோனா; ஓராண்டை ஓவர்டேக் செய்த ஒரு மாத பாதிப்பு!

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில், “சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்றாளர்கள் உள்ள பகுதியாக கோவை உள்ளது. தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் போது போதியளவு தொற்று தடுப்புப் பணிகள் நடைபெறவில்லை. குறைவான தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. நெருக்கடியான காலகட்டத்தில் தேவையான அளவு வேகமாக அரசு செயல்படவில்லை. தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து எழுத்தாளர் இரா.முருகவேல் கூறுகையில், “தொற்று பாதிப்புகள் அதிகரிப்பதை வைத்து கோவையை திமுக அரசு புறக்கணிக்கப்படுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது தவறானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஒரு பெரிய தொழில் மண்டலத்தை ஒரு அரசு நாசமாக விடவே விடாது. அதிமுக எம்.எல்.ஏ. க்கள் முடங்கிப் போக, திமுக பிரதிநிதிகள் இல்லாத நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. பொறுப்பெடுத்துச் செய்யும் அதிகாரிகளும் இல்லை. திமுக அரசு இரண்டு அமைச்சர்களை அனுப்பியும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டால் கொரோனா தொற்று பாதிப்புகளை குறைக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியிருப்பது கோவை மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget