மேலும் அறிய

Maruthamalai: இயற்கை எழில் கொஞ்சும் மருதமலையில் அருள்பாவிக்கும் சுப்பிரமணிய சாமி - சிறப்புகள் என்னென்ன?

கோவை நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை ஏழில் சூழல் சுப்பிரமணிய சாமி காட்சியளிக்கிறார்.

கோவை மாவட்டத்தில் கோயில் என்றாலே, பலருக்கும் மருதமலை முருகன் கோயில் தான் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மருதமலை முருகன் கோவில் பிரசிதி பெற்றதாக விளங்குகிறது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் மருதமலை அமைந்துள்ளது. கோவை நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை ஏழில் சூழல் சுப்பிரமணிய சாமி காட்சியளிக்கிறார்.   முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் மருதமலை கருதப்படுகிறது. இந்த கோவில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.

பெயர்க் காரணம்

மருதமலை கோயில் கொங்கு சோழர்களால் முதன்முதலில் அமைக்கப்பட்டது. பின்னர், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்று இத்திருத்தலம் உருவானது. இந்த கோவில் அமைந்துள்ள மலையில் மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால், இம்மலை மருதமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தலத்தின் தலவிருட்சமாக மருதமரம் விளங்குகின்றது. இம்மலையில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான் மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம், மருத மரங்கள் நிறைந்த மலைக்குத் தலைவன் என்பதாகும். இத்தலப் பெருமான் மருதமலையான், மருதப்பன், மருதாசலமூர்த்தி, சுப்பிரமணிய சுவாமி, தண்டாயுதபாணி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

மலையேறும் பாதைகள்

கோவை நகரில் இருந்து மருதமலை செல்ல தொடர்ச்சியாக நிறைய பேருந்துகள் உள்ளன. மருதமலை அடிவாரம் வரை அரசுப் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் செல்லலாம். மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம். இந்தப் பாதையில் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படும். இதனால் இரவு நேரங்களில் மருதமலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். படிகளில் ஏறி மலையேற முடியாதவர்கள் செல்ல மாற்றுப்பாதையும் உள்ளது. அப்பாதையில்  கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். அல்லது தனியார் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லலாம்.


Maruthamalai: இயற்கை எழில் கொஞ்சும் மருதமலையில் அருள்பாவிக்கும் சுப்பிரமணிய சாமி - சிறப்புகள் என்னென்ன?

மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம். புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், உலோகக் கொடிமரம், மயில்வாகனம் ஆகியவை உள்ளன. முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும், வீரபத்திரரும் உள்ள நிலையில், கருவறையில் தண்டாயுதபாணி காட்சியளிக்கும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பாட்டி சித்தர் குகை

இந்த கோயிலுக்கு அருகில் தெற்கு மூலையில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்கி செல்லும் வகையில் உள்ளன. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது.

இந்த கோவில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை, ஆடி பதினெட்டு, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூச விழா, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பிரசிதி பெற்ற இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget